அசாமில் பயங்கரவாத தாக்குதல்: 3 ராணுவ வீரர் பலி

அசாமின் டிக்போய் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும், உபா பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த  துப்பாக்கிச்சண்டையில் ராணுவ வீரர்கள் 3 பேர் பலியாகினர். மேலும் இவ்விபத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர். 

Last Updated : Nov 19, 2016, 12:48 PM IST
அசாமில் பயங்கரவாத தாக்குதல்: 3 ராணுவ வீரர் பலி title=

குவகாத்தி: அசாமின் டிக்போய் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும், உபா பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த  துப்பாக்கிச்சண்டையில் ராணுவ வீரர்கள் 3 பேர் பலியாகினர். மேலும் இவ்விபத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர். 

தின்சுகியா வனப்பகுதியில் ராணுவம் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது. கடந்த  புதன்கிழமை அங்குள்ள தேயிலை எஸ்டேட்டுக்கு சொந்தமான பணத்தை கொண்டு சென்ற வாகனம் மீது உல்பா பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். 

தொடர்ந்து துப்பாக்கிச்சண்டை நடந்து வருகிறது. உல்பா பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. 

உல்பா பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் சிலரை சுற்றி வளைத்து, பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Trending News