Sputnik V தடுப்பூசி விற்பனை எப்போது தொடங்கும்; அரசு கூறுவது என்ன?

ஸ்புட்னிக் வி என்பது மூன்று வார இடைவெளியில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய இரண்டு டோஸ் தடுப்பூசி ஆகும். இதன்  முதல் மற்றும் இரண்டாவது டோஸ் தடுப்பூசிகளில் உள்ள ஆன்டிஜென்கள் ஒன்றுக்கொன்று வேறுபடுகின்றன. மற்ற தடுப்பூசிகளில், இரண்டு டோஸ்களிலும் ஆண்டிஜன்கள் ஒரே அளவில் உள்ளன.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : May 13, 2021, 07:55 PM IST
  • தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ், கோவிஷீல்ட், கோவேக்ஸின் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி மூன்றாவது தடுப்பூசியாக இருக்கும்.
  • தற்போது பயன்பாட்டில் உள்ள மற்ற தடுப்பூசிகளில், இரண்டு டோஸ்களிலும் ஆண்டிஜன்கள் ஒரே அளவில் உள்ளன.
Sputnik V தடுப்பூசி விற்பனை எப்போது தொடங்கும்; அரசு கூறுவது என்ன? title=

கொரோனா வைரஸின் இரண்டாவது அலைகளுடன் இந்தியா போராடி வரும் நிலையில், மத்திய மாநில அரசுகள் இணைந்து நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த சீராம் நிறுவனம் தயாரிக்கும் கோவிஷீல்ட் மற்றும்  பாரத்பயோடெக் நிறுவனம் தயாரிக்கும் கோவேக்ஸின் ஆகியவற்றின் பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, இதுவரை நாட்டில் 17 கோடிக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், மக்களுக்கு நிம்மதி அளிக்கும் ஒரு செய்தியாக ஸ்புட்னிக் வி (Sputnik V) தடுப்பூசி அடுத்த வாரத்திற்குள் சந்தையில் கிடைக்கும் என்று நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே.பால், கூறினார்.

“ஸ்புட்னிக் வி தடுப்பூசி அடுத்த வாரத்திற்குள் சந்தையில் கிடைக்கும் என்று  நம்புகிறோம்” என்று டாக்டர் வி.கே. பால் தெரிவித்தார்.

 தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ், கோவிஷீல்ட், கோவேக்ஸின் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி மூன்றாவது தடுப்பூசியாக இருக்கும். 

ALSO READ | ரஷ்யாவின் Sputnik V தடுப்பூசி AK47 போல நம்பகமானது: விளாடிமிர் புடின்

 

ஸ்புட்னிக் வி (Sputnik V) என்பது மூன்று வார இடைவெளியில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய இரண்டு டோஸ் தடுப்பூசி ஆகும். இதன் தனிப்பட்ட அம்சம் என்னவென்றால், முதல் மற்றும் இரண்டாவது டோஸ் தடுப்பூசிகளில் உள்ள ஆன்டிஜென்கள் ஒன்றுக்கொன்று வேறுபடுகின்றன. தற்போது பயன்பாட்டில் உள்ள மற்ற தடுப்பூசிகளில், இரண்டு டோஸ்களிலும் ஆண்டிஜன்கள் ஒரே அளவில் உள்ளன.

மே 1 ஆம் தேதி, இந்தியாவிற்கு  ஸ்பூட்னிக் -V  (Sputnik-V ) தடுப்பூசியின் 15 லட்சம் டோஸ் வந்துள்ள நிலையில், மேலும்  15 லட்சம் டோஸ் விரவீல் விரைவில் இந்தியாவிற்கு வந்து சேரும் என கூறப்படுகிறது.

இந்தியாவுக்கு, மே மாதத்தில் 30 லட்சம், ஜூன் மாதத்தில் 50 லட்சம், ஜூலை மாதம் 1 கோடி என்ற அளவில், 1 கோடியே 80 லட்சம் ஸ்பூட்னிக் வி டோஸ் கிடைக்கும் . தடுப்பூசிக்கு நிதியளித்த ரஷ்ய இறையாண்மை நிதியமான ரஷ்ய நேரடி முதலீட்டு நிதி (RDIF) 5 இந்திய நிறுவனங்களுடன் 85 கோடி டோஸ் தடுப்பூசி தயாரிப்பதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.

இவை இந்தியாவில் பயன்படுத்தப்படுவதோடு மட்டுமல்லாமல், வேறு நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படும்.

ALSO READ | Sputnik V: 2022 மார்ச் மாதத்திற்குள் 36 கோடி இந்தியர்களுக்கு ரஷ்ய தடுப்பூசி

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News