Air Asia விமானம் மீது பறவை மோதியது; அதிர்ஷ்டவசமாக விபத்து தவிர்ப்பு; பயணிகள் நலம்

ராஞ்சி விமான நிலையத்தில் இருந்து மும்பைக்கு புறப்பட்ட ஏர் ஏசியா இந்தியா விமானம் மீது பறவை மோதியதில் விமானம் தரையிறக்கப்பட்டது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 8, 2020, 03:52 PM IST
  • ராஞ்சி விமான நிலையத்தில் இருந்து மும்பைக்கு புறப்பட்ட ஏர் ஏசியா இந்தியா விமானம் மீது பறவை மோதியதில் விமானம் தரையிறக்கம்
  • பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை.
  • ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 35 அடி பள்ளத்தில் வீழ்ந்ததில் 18 பேர் பலி.
Air Asia விமானம் மீது பறவை மோதியது; அதிர்ஷ்டவசமாக விபத்து தவிர்ப்பு; பயணிகள் நலம் title=

புது டெல்லி: ராஞ்சி விமான நிலையத்தில் (Ranchi Airport) சனிக்கிழமை காலை விமானம் புறப்பட்டபோது பறவை ஒன்று மோதியதில் ஏர் ஏசியா (Air Asia flight)  விமானம் தரையிறக்கப்பட்டது. இதமூலம் ஒரு பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. சில நடைமுறைகளை முடித்த பின்னர் விமானம் மீண்டும் புறப்படும்.

விமானம் புறப்படுவது நிறுத்தப்பட்டு உள்ளது. தற்போது விமானம் பரிசோதிக்கப்பட்டு வருகிறது. அதன் பின்னர் விமானம் புறப்பட அனுமதிக்கப்படும்.

ஏர் ஏசியா இந்தியா "பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை" அளிக்கிறது மற்றும் இந்த தாமதத்தின் காரணமாக ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறது" என்று செய்தித் தொடர்பாளர் கூறினார்.

ALSOREAD |  Air India Plane crash: ஏர் இந்தியா விமானம் விபத்து.. நடந்தது என்ன?

விமான நிலைய இயக்குனர் வினோத் சர்மா (Airport Director Vinod Sharma) இந்த சம்பவத்தை உறுதிப்படுத்தியதோடு, ஒரு பறவை விமானத்தில் மோதியதாகவும், நாங்கள் நடைமுறைகளை கவனிக்கவில்லை என்றும் அவரே கூறினார்.

துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 190 பேருடன் கோழிக்கோடு (Kozhikode Airport) விமான நிலையத்தில் தரையிறங்கும் போது ஓடுபாதை தாண்டி அருகில் இருந்த 35 அடி பள்ளத்தில் வீழ்ந்தது. இந்த சம்பவத்தில் இரண்டு துண்டுகளாக விமானம் உடைந்து குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டனர்.

ALSOREAD |  Air India Plane Crash: விமானத்தை ஓட்டியவர் MiG விமானங்களை ஓட்டிய ஒரு அனுபவமிக்க Pilot!!

நேற்று கேரள மாநிலம் கோழிக்கோடுவில் விமானம்  (Air India Express flight) தரையிறங்கும் போது கட்டுப்பாட்டை இழந்து இரண்டாக நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானதில் 18 பேர் உயிரிழந்த சம்பவம் அடங்குவதற்குள் தற்போது மும்பையிலும்  நடைபெற இருந்த விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending News