LGBTQI: தன்பாலின திருமணம் என்று அழைக்கலாமா? இல்லை திருமண சமத்துவ உரிமைகள் என்பது சரியா?

Same sex marriage Hearing At Supreme Court: இந்தியாவின் ஓரே பாலினத்தை சேர்ந்தவர்கள் திருமணம் செய்துக் கொள்வதற்கு அங்கீகாரம் கொடுப்பது தொடர்பான முடிவெடுக்கும் வரலாற்று சிறப்புமிக்க விசாரணையின் சுவாரசியமான வாதங்கள்... 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Apr 28, 2023, 05:01 PM IST
  • ஓரே பாலினத்தை சேர்ந்தவர்கள் திருமணம் செய்துக் கொள்வதற்கு அங்கீகாரம் அவசியமா?
  • உச்ச நீதிமன்றத்தில் காரசாரமான விவாதங்கள்
  • நீதிபதிகளின் கேள்விகளும், வழக்குரைஞர்களின் விளக்கங்களும்
LGBTQI: தன்பாலின திருமணம் என்று அழைக்கலாமா? இல்லை திருமண சமத்துவ உரிமைகள் என்பது சரியா? title=

நியூடெல்லி: இந்தியாவில் தன்பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு ஏப்ரல் 18 முதல் விசாரித்து வருகிறது. தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதி எஸ். கே கவுல், நீதிபதி எஸ். ரவீந்திர பட், நீதிபதி பி.எஸ். நரசிம்ஹா மற்றும் நீதிபதி ஹிமா கோஹ்லி என 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த மனுக்களின் மீதான விசாரணை உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்தியாவின் ஓரே பாலினத்தை சேர்ந்தவர்கள் திருமணம் செய்துக் கொள்வதற்கு அங்கீகாரம் கொடுப்பது தொடர்பான முடிவெடுக்கும் வரலாற்று சிறப்புமிக்க விசாரணையின் சுவாரசியமான வாதங்கள் அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டியது அவசியம் ஆகும்.

இந்த விசாரணையில் இதுவரை ஆறு அமர்வுகள் முடிந்துவிட்டது. பல்வேறு தனிநபர்கள் மற்றும் குழுக்களிடமிருந்து பலவிதமான கருத்துகள் மற்றும் அறிக்கைகள் கிடைத்துள்ளன. அவற்றில் சில அசாதாரணமானவை, வேறுசில அற்புதமானவை. 

மேலும் படிக்க | CJI: ஆண் பெண் என முடிவு செய்வது எது? உச்ச நீதிமன்ற விசாரணையில் தலைமை நீதிபதி

'நாம் சமமானவர்கள் அல்ல' என்று ஒரு அரசு ஏன் சொல்கிறது?
மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, இந்திய அரசியலமைப்புச் சட்டம் அனைவருக்கும் தங்கள் வாழ்க்கையை கண்ணியமாக வாழ உரிமை வழங்கியுள்ளது என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார். "எங்கள் உரிமைகள் ஒரே மாதிரியாக இருந்தால், பிரிவுகள் 14, 15 மற்றும் 21 இன் கீழ் நாம் முழு உரிமைகளையும் அனுபவிக்க வேண்டும்," என்று அவர் கூறினார்.

ஆண், பெண் என்பதை தீர்மானிப்பது பிறப்புறுப்புகளா?
தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தற்போதைய பாலின திருமணம், விவாதங்கள் தொடர்பாக பேசும்போது, பிறப்புறுப்புகளால் ஆண் அல்லது பெண் என்பது தீர்மானிக்கப்படுவதில்லை என்றும் கூறினார்.

பிறப்புறுப்புகள் மற்றும் சட்டங்கள்
பெண்களை மையமாகக் கொண்ட சட்டங்களுக்கு என்ன நடக்கும் என்றும், பிறப்புறுப்பு ஒருவரின் பாலினத்தை முடிவு செய்வதில்லை என்றால், ஒரு நபரை ஒரு குறிப்பிட்ட சட்டப் பிரிவின் கீழ் விசாரிக்க முடியுமா என்பதை நீதிமன்றங்கள் எவ்வாறு தீர்மானிக்கும் என்று சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கேள்வி எழுப்பினார். CrPC இன் பிரிவு 160 ஐக் குறிக்கிறது, இதன்படி பெண்களை விசாரணைக்கு காவல் நிலையத்திற்கு அழைக்க முடியாது.

மேலும் படிக்க | 8th Pay Commission மாஸ் அப்டேட்: விரைவில் எக்கச்சக்க ஊதிய உயர்வு, குஷியில் ஊழியர்கள்

திருமணம் 'உரிமைகளின் பூங்கொத்து'
மூத்த வழக்கறிஞர் மேனகா குருசுவாமி, ஓரினச்சேர்க்கை திருமணங்கள் வெறும் கண்ணியம் மட்டுமல்ல, ஆயுள் காப்பீட்டைப் பெறுவதற்கான அடிப்படை உரிமை உட்பட பல உரிமைகளையும் தம்பதியருக்கு வழங்குகின்றன என்று கூறினார்.

"என்னால் எஸ்சிபிஏ மருத்துவக் காப்பீட்டை வாங்க முடியாது" என அருந்ததி கட்ஜுவுடன் இணைந்து இந்திய தண்டனைச் சட்டத்தின் 377வது பிரிவை வரலாற்று ரீதியாக நீக்கியதன் பின்னணியில் இருக்கும் குருசாமி தனது சொந்த உறவைக் குறிப்பிடுகிறார்.

2019 ஆம் ஆண்டில், வழக்கறிஞர்கள் மேனகா குருசுவாமி & அருந்ததி கட்ஜு அவர்கள் ஒரு ஜோடி என்பதை வெளிப்படுத்தினனார்கள் என்பது குறிப்பிடத்தகக்து. 

சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ஒரே பாலின உறவுகள் மற்றும் உடலுறவு ஆகியவற்றை குறிப்பிட்டு, அவற்றை "தடைசெய்யப்பட்ட உறவுகள்" என்று தெரிவித்தார்..

ஒரே பாலின உறவுகளும் நிலையானவை
திருமணத்திற்கு வெவ்வேறு பாலினமாக இருப்பதன் அவசியத்தை கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், ஒரே பாலின உறவுகள் "உடல் ரீதியாக மட்டும் அல்ல" என்று வலியுறுத்தினார்.

குழந்தைக்கு தந்தை யார்? 
ஜமியத்-உலேமா-இ-ஹிந்த் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், மக்கள் எந்த வகையான உறவுமுறையில் இருக்க வேண்டும் என்றும், ஓரினச்சேர்க்கையாளர் திருமணத்துக்கு அங்கீகாரம் என்பது த்துக்கு எதிராக இடஒதுக்கீடு பதிவுசெய்து, ஒரே பாலின திருமணங்களில் அவர்களின் குழந்தைகளுக்கு தந்தை யாராக இருப்பார் என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் படிக்க | உங்கள் ரயில் டிக்கெட்டில் வேறொருவரை பயணம் செய்ய வைப்பது எப்படி தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News