ராம் கோவில் பிரச்சனைக்கு, பாக்கிஸ்தான் நீண்டகால தடை!

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில்,  ராமர் கோவில் கட்டுவது தொடர்பான பிரச்சினை நீண்டகாலமாக இருந்து வருகிறது.

Last Updated : Nov 22, 2017, 04:01 PM IST
ராம் கோவில் பிரச்சனைக்கு, பாக்கிஸ்தான் நீண்டகால தடை! title=

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பான பிரச்சினை நீண்டகாலமாக இருந்து வருகிறது. இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் கடந்த 6 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கு விசாரணையை உடனடியாக நடத்தவேண்டும் என்று மனுதாரர்களில் ஒருவரும், டெல்லி மேல்–சபை பா.ஜனதா எம்.பி.யுமான சுப்பிரமணியசாமி சுப்ரீம் கோர்ட்டை ஏற்கனவே கேட்டு கொண்டிருந்தார். .

இந்நிலையில், ராம் கோவில் பிரச்சனையில் பாக்கிஸ்தான் நீண்டகாலமாக தடைகளை உருவாக்க முயற்சித்து வருகிறது.என்று, சையத் வாசிம் ரிஸ்வி தலைவர் ஷியா வாக்ஃப் வாரியம் தெரிவித்துள்ளார். மேலும் அவர் லஷ்கர்-ஏ-தொய்பா 2005 -ல் ரம்ஜனமின் பூமியையும் தாக்கியது நினைவிருக்கிறதா? என்றும் கேள்வி எழுபியுள்ளார்.

லஷ்கர்-ஏ-தொய்பா தெற்காசியாவின் மிகப்பெரிய இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளில் ஒன்றாகும். காஷ்மீரை இந்தியாவிலிருந்து விடுதலை செய்து பாகிஸ்தானிடம் இணைக்கவேண்டும் என்பது இவ்வமைப்பின் முக்கிய நோக்கம் ஆகும்.

Trending News