அயோத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் தொடங்கம், 36-40 மாதங்களில் நிறைவு: அறக்கட்டளை

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது குறித்து கலந்துரையாட ஸ்ரீ ராமர் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் உறுப்பினர்கள் வியாழக்கிழமை புதுடெல்லியில் கூடினர்.

Last Updated : Aug 20, 2020, 03:08 PM IST
    1. அயோத்தியில் ராம் கோயில் கட்டுவது குறித்து விவாதங்களை நடத்த ஸ்ரீ ராமர் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் உறுப்பினர்கள் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 20) புதுடெல்லியில் கூடினர்.
    2. கட்டுமான பணியில் ஐஐடி சென்னையை சேர்ந்த சிறந்த வல்லுநகள் இதற்கான பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
    3. கட்டுமானப் பணிகள் 36-40 மாதங்களில் நிறைவடையும் என்று ராமர் கோயில் அறக்கட்டளை நம்பிக்கை தெரிவித்தது.
அயோத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் தொடங்கம், 36-40 மாதங்களில் நிறைவு: அறக்கட்டளை title=

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது குறித்து கலந்துரையாட ஸ்ரீ ராமர் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் உறுப்பினர்கள் வியாழக்கிழமை புதுடெல்லியில் கூடினர்.

கூட்டத்திற்குப் பிறகு, ஸ்ரீ ராமர் ஜன்மபூமி தீர்த் க்ஷேத்ரா அறக்கட்டளை அயோத்தியில் ஸ்ரீ ராமர் ஜன்மபூமி கோயில் கட்டுமானப் பணிகள் தொடங்கியுள்ளதாகவும், CBRI Roorkee, IIT Madras மற்றும் லார்சன் மற்றும் டூப்ரோ ஆகியோரின் பொறியாளர்கள் தற்போது கோயில் தளத்தில் மண்ணை சோதித்து வருவதாகவும் தெரிவித்தார். கட்டுமானப் பணிகள் 36-40 மாதங்களில் நிறைவடையும் என்று ராமர் கோயில் அறக்கட்டளை நம்பிக்கை தெரிவித்தது.

 

ALSO READ | ஸ்ரீராமர் கோயில் காலம் கடந்து நிற்க நுட்பத்தை சொல்கிறது சென்னை IIT...!!!

 

 

இந்தியாவின் பண்டைய மற்றும் பாரம்பரிய கட்டுமான நுட்பங்களின்படி அயோத்தியில் உள்ள ராமர் கோயில் கட்டப்படும் என்று ஸ்ரீ ராமர் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை தெரிவித்துள்ளது. பூகம்பங்கள், புயல்கள் மற்றும் பிற இயற்கை பேரழிவுகளைத் தக்கவைக்க கோயில் கட்டப்படும் என்றும் வரலாற்று சிறப்புமிக்க கோயிலின் கட்டுமானத்தில் இரும்பு பயன்படுத்தப்படாது என்றும் அறக்கட்டளை ட்வீட்டில் தெரிவித்துள்ளது.

 

 

 

"கோயில் கட்டுமானத்திற்காக, செப்பு தகடுகள் பயன்படுத்தப்படும். தட்டுகள் 18 அங்குல நீளம், 30 மிமீ அகலம் மற்றும் 3 மிமீ ஆழத்தில் இருக்க வேண்டும். 10,000 போன்ற தட்டுகள் மொத்த கட்டமைப்பில் தேவைப்படலாம். இதுபோன்ற செப்புத் தகடுகளை அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்குமாறு ஸ்ரீ ராமர் பக்தாக்களிடம் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்”என்று அறக்கட்டளை மற்றொரு ட்வீட்டில் தெரிவித்துள்ளது.

 

ALSO READ | ராம் ஜன்மபூமி, ஹனுமன்கரி ஆகியோரைப் பார்த்த பிறகு பிரதமர் மோடி சிறப்பு சாதனை படைத்தார்

முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 5 ம் தேதி அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராமர் ஜன்மபூமியில் ராமர் கோயிலின் 'பூமி பூஜை' நடத்தி கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார்.

Trending News