பசு பாதுகாப்பு என வன்முறை ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை: மோடி

Last Updated : Jul 16, 2017, 02:05 PM IST
பசு பாதுகாப்பு என வன்முறை ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை: மோடி title=

பசு பாதுகாப்பு என்ற பெயரில் வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி மாநில அரசுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

பார்லிமென்ட் மழைக்காலக் கூட்டத் தொடர் நாளை தொடங்க உள்ளது. இந்த கூட்டம் ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதனையடுத்து இன்று அனைத்து கட்சி கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சி நிர்கவாகிள் கலந்து கொண்டனர். அப்போது இக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி:- 

பசுக்கள் காக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றமில்லை. அதே நேரத்தில் பசு பாதுகாப்பு என்ற பெயரில் வன்முறை செயல்களை அனுமதிக்க முடியாது. சமூக விரோத செயல்களை தடுக்க வேண்டும். வன்செயல்களில் ஈடுபடுவோர்கள் மீது மாநில அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இவ்வாறு மோடி கூறினார்.

Trending News