பெட்ரோல் பங்க் வேலைநிறுத்த அறிவிப்பு வாபஸ்

Last Updated : Jun 15, 2017, 10:14 AM IST
பெட்ரோல் பங்க் வேலைநிறுத்த அறிவிப்பு வாபஸ் title=

பெட்ரோல் பங்க் உரிமையாளர்களின் வேலைநிறுத்த அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது. டெல்லியில் பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. 

பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினமும் நள்ளிரவில் நிர்ணயிக்க எதிர்ப்பு தெரிவித்து  ஜூலை 16-ம் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் அறிவித்திருந்தனர்.

இதனையடுத்து டெல்லியில் பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுடன் நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு நள்ளிரவு 12 அமலாகும் விலை மாற்ற அறிவிப்பு காலை 6 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது. 

Trending News