தேசிய போர் நினைவிடம் இல்லாதது வேதனையளிக்கிறது -மோடி!

மக்களவை தேர்தல் பணிகள் உள்ள காரணத்தால், தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் மீண்டும் மே மாதத்தில் மன் கி பாத் நிகழ்ச்சியில் உரை நிகழ்த்துவதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

Last Updated : Feb 24, 2019, 01:34 PM IST
தேசிய போர் நினைவிடம் இல்லாதது வேதனையளிக்கிறது -மோடி! title=

மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று வானொலி மூலம், "மன் கி பாத்" என்ற நிகழ்ச்சி வாயிலாக பிரதமர் மோடி, நாட்டு மக்களுடன் உரையாற்றி வருகிறார். அந்த வகையில் பிப்ரவரி மாதத்தின் கடைசி ஞாயிற்றுகிழமையான இன்று பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுடன் "மன் கி பாத்" நிகழ்ச்சி வாயிலாக உரையாற்றினார்.

அப்போது "நான் பிரதமராக மான் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றுவது இதுவே கடைசி முறை. தேர்தல் வர இருப்பதால் 3 மாதங்களுக்குப் பிறகுதான் மான் கி பாத்தில் பேச முடியும். எதிர் வரும் மக்களவை தேர்தலில் வேட்பாளராக நானும் போட்டியிடுவேன்" என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் புல்வாமா தாக்குதலில் ஈடுப்பட்ட தீவிரவாதிகளுக்கு புரியும் மொழியில் இந்திய ராணுவத்தினர் பதிலடி கொடுத்துக் கொண்டிருப்பதாக தெரிவித்தார். 

புல்வாமா தீவிரவாத தாக்குதலை பற்றி குறிப்பிட்ட பேசிய மோடி, இந்த தாக்குதலால் நாட்டு மக்கள் மனதில் கோபமும், வலியும் ஏற்பட்டு இருப்பதாக குறிப்பிட்டார்.

தாய் மண்ணுக்காக உயிர் நீத்த வீரர்களுக்கு தலை வணங்குவதாக கூறிய பிரதமர், உயிர் தியாகம் செய்த வீரர்களின் குடும்பத்தில் உள்ள குழந்தைகளும் ராணுவத்தில் சேர விரும்புவதை பார்க்க முடிவதாகவும் பெருமிதம் தெரிவித்தார். 

இணையற்ற தைரியத்தை ராணுவ வீரர்கள் வெளிப்படுத்துவதாகக் கூறிய மோடி, ஒரு புறம் அமைதியை நிலைநாட்டுவதிலும், மறுபுறம் தீவிரவாதிகளுக்கு புரியும் மொழியில் பதிலடியையும் ராணுவ வீரர்கள் கொடுத்துக் கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

இந்தியாவில் தேசிய போர் நினைவிடம் இல்லாதது தனது மிகுந்த வலியை ஏற்படுத்தியதாக தெரிவித்த மோடி, நாளை டெல்லியில் இந்தியா கேட் அருகே கட்டப்பட்டுள்ள நினைவிடத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.  

மக்களவை தேர்தல் பணிகள் உள்ள காரணத்தால், தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் மீண்டும் மே மாதத்தில் மன் கி பாத் நிகழ்ச்சியில் உரை நிகழ்த்துவதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

Trending News