தெலங்கான சட்டமன்ற தேர்தல்; வேட்புமனு தாக்கல் துவங்கியது!

வரும் டிசம்பர் 7-ஆம் நாள் நடைபெறவுள்ள தெலுங்கானா சட்டமன்ற தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பினை இன்று தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது!

Last Updated : Nov 12, 2018, 05:04 PM IST
தெலங்கான சட்டமன்ற தேர்தல்; வேட்புமனு தாக்கல் துவங்கியது! title=

வரும் டிசம்பர் 7-ஆம் நாள் நடைபெறவுள்ள தெலுங்கானா சட்டமன்ற தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பினை இன்று தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது!

119 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட தெலங்கான மாநிலத்தில் வரும் டிசம்பர் 7-ஆம் நாள் சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைப்பெறுகிறது. பதிவாகும் வாக்குகள் வரும் டிசம்பர் 11-ஆம் நாள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியாகும். இந்நிலையில் இந்த தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பினை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

தெலங்கானாவில் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி தலைமையிலான ஆட்சி நடைப்பெற்று வந்த நிலையில் அங்கு முதல்வராக பதவி வகித்து வந்த சந்திரசேகர் ராவ் சட்டப்பேரவையின் பதவிக்காலம் முடிய 8 மாதங்கள் இருக்கும் முன்னரே சட்டப்பேரவையை கலைத்தார். 

இதைனையடுத்து வரும் டிசம்பர் 7-ஆம் நாள் இம்மாநிலத்திற்கான சட்டமன்ற தேர்தல் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் இன்று தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது...

தேர்தல் விவரம்...

  • தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று துவங்கி வரும் 19-ம் தேதி வரை வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யலாம். 
  • நவம்பர் 20-ஆம் நாள் வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும். 
  • நவம்பர் 22-ஆம் நாள் வேட்புமனுக்களைத் திரும்பப்பெற கடைசிநாள்.
  • டிசம்பர் 7-ஆம் நாள் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும்
  • டிசம்பர் 11-ஆம் நாள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். என குறிப்பிடப்பட்டுள்ளது.

வாக்காளர் விவரம்...

  • மொத்த வாக்காளர்கள் - 2.73 கோடி
  • ஆண் வாக்காளர்கள் - 1.38 கோடி
  • பெண் வாக்காளர்கள் - 1.35 கோடி
  • 3-ஆம் பாலினத்தவர் - 2663

இதற்கிடையில் வரும் நவம்பர் 14-ஆம் நாள் சந்திரசேகர ராவ் மேடக் மாவட்டத்தில் வேட்புமனு தாக்கல் செய்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸ், தற்போது தெலங்கு தேசம் கட்சியோடு கூட்டணி வைத்துள்ள நிலையில் சந்திரசேகர ராவ் பலத்த எதிர்ப்பினை இந்த தேர்தலில் எதிர்கொள்வார் என தெரிகிறது. 

Trending News