Omicron: இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று பாதிப்பு 21 ஆக உயர்வு

மகாராஷ்டிராவுக்குப் பிறகு, இப்போது ஜெய்பூர் மாநிலத்தில் 9 ஓமிக்ரான் நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதை அடுத்து நாட்டில் மொத்தம் 21 தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 6, 2021, 06:51 AM IST
Omicron: இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று பாதிப்பு 21 ஆக உயர்வு title=

இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிராவை அடுத்து, தற்போது ஜெய்ப்பூரில் 9 பேருக்கு தென்னாப்பிரிக்காவின் ஓமிக்ரான் மாறுபாடு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 4 பேர் தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பியவர்கள், மற்ற 5 பேர் அவர்களுடன் தொடர்பில் வந்தவர்கள். அனைவருக்கும் நடத்தப்பட்ட பரிசோதனையில் Omicron தொற்று பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அனைவரது நிலையும் சீராக  இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவிலும் தொற்று பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன
முன்னதாக, மகாராஷ்டிராவில் மேலும் 7 ஓமிக்ரான் வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் பிம்ப்ரியில் மேலும் 6 வழக்குகளும், புனேவில் மேலும் 1 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதை அடுத்து மகாராஷ்டிராவில் இதுவரை மொத்தம் 8 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், கொரோனாவின் இரண்டாவது அலையின் தாக்கம் மகாராஷ்டிரவில் அதிக அளவில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஒரே நேரத்தில் 7 பேருக்கு தொற்று உறுதியானது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது ஜெய்ப்பூரிலும் புதிய தொற்று பாதிப்பு உறுதியானதை அடுத்து பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

ALSO READ Breaking! Omicron Alert: டெல்லியிலும் நுழைந்துவிட்டது ஒமிக்ரான் வைரஸ்

ராஜஸ்தானில்  9 பேர் கொரோனாவின் புதிய மாறுபாட்டான ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவச் செயலர் வைபவ் கலாரியா, தென்னாப்பிரிக்காவிலிருந்து வந்த அந்த குடும்பத்தினரை RUHS மருத்துவமனையில் ஏற்கனவே அனுமதித்துள்ளதாகத் தெரிவித்தார். அவருடன் தொடர்பில் இருந்த மேலும் 5 பேருக்கும் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களும் RUHS இல் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த குடும்பத்தினர் உட்பட அவருடன் தொடர்பு கொண்ட 34 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், 9 பேருக்கு கொரோனாவின் புதிய மாறுபாட்டான ஓமிக்ரான் பாசிட்டிவ் இருப்பதும், மீதமுள்ள 25 பேருக்கு நெகடிவ் என்றும் மருத்துவச் செயலாளர் கூறினார்.  சிகார் மாவட்டத்தில் உள்ள அஜித்கரைச் சேர்ந்த ஒரு குடும்பமும் அந்தக் குடும்பத்துடன் தொடர்பில் இருந்ததாக அவர் கூறினார். சிகாரில் அந்த 8 பேரையும் கண்டுபிடித்தது பரிசோதனை செய்ததில், அவர்கள் அனைவருக்கும் கொரோனா நெகட்டிவ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ALSO READ இந்தியாவில் வயது வந்தோரில் பாதி பேருக்கு 2 டோஸ் தடுப்பூசி வழங்கி சாதனை!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News