ஒரே நாடு ஒரே அடையாள அட்டை; 2021-ல் டிஜிட்டல் முறையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு: ஷா

ஆதார், வாக்காளர் அடையாள அட்டை எண், பான் கார்டு உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் உள்ளடக்கிய குடியுரிமை அட்டை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக அமித்ஷா தெரிவித்துள்ளார்!

Last Updated : Sep 23, 2019, 02:24 PM IST
ஒரே நாடு ஒரே அடையாள அட்டை; 2021-ல் டிஜிட்டல் முறையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு: ஷா title=

ஆதார், வாக்காளர் அடையாள அட்டை எண், பான் கார்டு உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் உள்ளடக்கிய குடியுரிமை அட்டை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக அமித்ஷா தெரிவித்துள்ளார்!

மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடர்பான பொது ஒருமித்த கருத்து குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கருத்து ஒன்றை தெரிவித்தார். இது 'ஒரு சலிப்பான பயிற்சி அல்ல' என்று குறிப்பிட்டு, 2021-க்குள் மக்கள் தொகை கணக்கெடுப்பை டிஜிட்டல் மயமாக்க பல அம்சங்களை அறிவித்தார். மொபைல் பயன்பாடு மற்றும் அனைத்து தரவிற்கும் ஒரே தளம். இதுபோன்ற ஒரு கணக்கெடுப்பைத் தொகுக்கும் செயல்முறை அரசாங்கத் திட்டங்களின் நன்மைகளை மக்களுக்கு வழங்க உதவும் ஒரு பயிற்சியாகும் என்று கூறி ஷா இந்த விஷயத்தை விரிவாக விளக்கினார். 

இது குறித்து அவர் கூறுகையில்; ஆதார், வாக்காளர் அடையாள அட்டை எண், பான் கார்டு உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் உள்ளடக்கிய குடியுரிமை அட்டை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையத்திற்கு புதிய கட்டடம் திறப்பு விழா டெல்லியில் இன்று நடந்தது. உள்துறை அமைச்சர் அமித்ஷா புதிய கட்டடத்தை திறந்து வைத்து உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், 2021 ஆம் ஆண்டு நடக்க உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்புக்காகவும், தேசிய குடியுரிமை பதிவேடு தயாரிக்கவும் ரூ. 12 ஆயிரம் கோடி செலவிடப்பட உள்ளதாக தெரிவித்தார். பேப்பருக்குப் பதிலாக மொபைல் ஆப் மூலம் மக்கள் தொகை கணக்கெடுப்பு விபரங்கள் பதிவு செய்யப்பட உள்ளதாகவும் அமித்ஷா கூறினார்.

மேலும், ஆதார், வாக்காளர் அடையாள அட்டை எண், பான் கார்டு உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் உள்ளடக்கிய குடியுரிமை அட்டை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தனது பேச்சில் அமித்ஷா குறிப்பிட்டார். 

 

Trending News