காரில் பயணிக்கும் போது குடும்பத்தையே தீ வைத்து கொளுத்திய நபர்

வியாபாரத்தில் நஷ்டம் காரணமாக, மனைவி மற்றும் மகனுடன் காரில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 20, 2022, 12:57 PM IST
  • ராம்ராஜ் குடும்பத்தினரை மதிய உணவுக்காக வெளியே அழைத்துச் சென்றதாக போலீசார் தெரிவித்தனர்.
  • காருக்குள் குடும்பத்துடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காரில் பயணிக்கும் போது குடும்பத்தையே தீ வைத்து கொளுத்திய நபர் title=

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பண நெருக்கடியால் அவதிப்பட்டு வந்த ஒருவர் தனது மனைவி மற்றும் மகனுடன் காருக்குள் குடும்பத்துடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. . இச்சம்பவத்தில்  தீ வைத்த கணவர்  உயிரிழந்துவிட்டார். அவரது மனைவி மற்றும் மகன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.அதிர்ச்சியைத் கொடுத்துள்ள இந்த சம்பவம் நாக்பூரின் பெல்டரோடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காப்ரி ரெஹாப் பகுதியில் நடந்துள்ளது.

தீக்குளித்து உயிரிழந்தவர் நாக்பூரில் ஜெய்தாலாவில் வசிக்கும் 58 வயதான ராம்ராஜ் கோபாலகிருஷ்ண பட் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். அவரது மனைவி சங்கீதா பட் மற்றும் மகன் நந்தன் ஆகியோர் பலத்த தீக்காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் படிக்க | மாணவி உயிரிழப்பு : கடலூரில் போலீஸ்படை குவிப்பு - எதனால் ?

இறந்தவரின் வீட்டில் இருந்து தற்கொலைக் குறிப்பு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. அதில் அவர் நிதி நெருக்கடியால் தனது வாழ்க்கையை முடித்துக் கொள்வதாகக் கூறியதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பட் வியாபாரத்தில் பெரும் நஷ்டம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

ராம்ராஜ் குடும்பத்தினரை மதிய உணவுக்காக வெளியே அழைத்துச் சென்றதாக போலீசார் தெரிவித்தனர். பயணம் செய்து கொண்டிருந்த போது, திடீரென தன் மீதும், மனைவி மற்றும் மகன் மீதும் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக்கொண்டதாக அவர் கூறினார். இறந்தவர் மீது பெல்தரோடி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். மகாராஷ்டிராவில் நடந்துள்ள இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | மசாலா பாக்கெட் கவரை விழுங்கிய ஏழு மாத குழந்தை உயிரிழப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News