விடிய விடிய வெளுத்து வாங்கிய கனமழை; பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..

இரவு முழுவதும் வெளுத்து வாங்கிய கனமழை எச்சரிக்கையை அடுத்து அனைத்து பள்ளி கூடங்களுக்கும் விடுமுறை அறிவிப்பு!!

Last Updated : Sep 19, 2019, 08:21 AM IST
விடிய விடிய வெளுத்து வாங்கிய கனமழை; பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. title=

இரவு முழுவதும் வெளுத்து வாங்கிய கனமழை எச்சரிக்கையை அடுத்து அனைத்து பள்ளி கூடங்களுக்கும் விடுமுறை அறிவிப்பு!!

மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் நேற்று இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. மும்பை புறநகர் பகுதியான நவி, தானே மற்றும் மும்பையின் வடக்கு பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை கொட்டி வருகிறது. மும்பையின் தெற்கு பகுதிகளில் இரவு 10.30 மணி முதல் மழை பெய்ய துவங்கியது. மும்பை புறநகர் பகுதிகளில் காலை 8.30 மணி முதல், இரவு 10.30 மணி வரை 54 மி.மீ., மழை பதிவானது, தெற்கு மும்பையில் 2.2 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. இந்நிலையில் மும்பை மற்றும் ராய்காட்டில் இன்று கனமழை கொட்டும் என எச்சரித்துள்ள இந்திய வானிலை மையம், 'ரெட் அலர்ட்' விடுத்துள்ளது.

'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து, மும்பை, தானே மற்றும் கோன்கான் பகுதிகளிலுள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மஹாராஷ்டிர மாநில பள்ளி, கல்வித்துறை அமைச்சர் ஆஷிஸ் செலார் உத்தரவிட்டுள்ளார். நீர்வழங்கல் பாதிப்புக்குள்ளான பகுதிகளிலிருந்து விலகி இருக்கவும், கடலோரப் பகுதிகளிலிருந்து தூரத்தை பராமரிக்கவும் BMC மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. மும்பை குடிமை அமைப்பால் துன்பத்தில் உள்ள மக்களுக்கு உதவ ஹெல்ப்லைன் எண் 1916 வழங்கப்பட்டுள்ளது.

மும்பை மற்றும் பால்கர், தானே மற்றும் ராய்காட் மாவட்டங்களில் வியாழக்கிழமை தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் அதிக மழை பெய்யக்கூடும் என்று IMD தனது வானிலை முன்னறிவிப்பில் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிராவின் பிற நகரங்களான நாசிக், புனே, அவுரங்காபாத் ஆகியவையும் அடுத்த 24 மணி நேரத்தில் மற்றொரு கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

 

Trending News