அந்தரங்க வீடியோவால் சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த நான்கு சிறுவர்கள்

மைனர் சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த நான்கு மைனர் சிறுவர்கள்.

Written by - Shiva Murugesan | Last Updated : Jul 2, 2018, 09:28 PM IST
அந்தரங்க வீடியோவால் சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த நான்கு சிறுவர்கள் title=

உத்தர பிரதேசம் மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் ஒரு பெண் குழந்தையை நான்கு சிறுவர்கள் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். இந்த நான்கு பேருக்கு எதிராக POCSO சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட குழந்தைகளின் வயது ஆறு முதல் பத்து ஆகும். குற்றம் சாட்டப்பட்ட குழந்தைகள் கிராம பஞ்சாயத்துகளில் தங்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

இந்த சம்பவம் கான்பூர் மாவட்டத்தில் உள்ள மஹாராஜாபூரில் நடந்துள்ளது. ஒரு விவசாயின் நான்கு வயது மகள் வீட்டுக்கு வெளிப்புறம் விளையாடி கொண்டு இருந்தாள், அப்பொழுது அக்கம்பக்கம் வீட்டை சேர்ந்த ஆறு முதல் பத்து வயது கொண்ட நான்கு சிறுவர்கள், அந்த சிறுமியுடன் விளையாடுவதாக கூறி பக்கத்தில் உள்ள வெற்று பகுதிக்கு அழைத்து சென்று பாலியல்ரீதியான தொந்தரவு கொடுத்துள்ளனர். மேலும் அந்த சிறுவர்களிடம் ஒரு செல்போனும் இருந்தது. அந்த போனில் அந்தரங்க வீடியோ இருந்ததால், அந்த வீடியோவை பார்த்துக்கொண்டு, அதேபோல அந்த சிறுவர்கள் சேர்ந்து சிறு பெண் குழந்தையை கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர்.

அதன் பின்னர் சிறுமி வீட்டுக்கு வந்துள்ளார். அப்பொழுது அந்த சிறுமிக்கு அந்தரங்க உறுப்பில் இருந்து ரத்தம் வந்துள்ளது. இதைப்பார்த்த பெற்றோர்கள் விளையாடும் போது எங்கியாவது கீழே விழுந்து அடிப்பட்டதால், ரத்தம் வருகிறது என நினைத்து, அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை அளிக்கபட்டது. பிறகு அந்த சிறுமி தனக்கு நடந்ததைப் பற்றி பெற்றோரிடம் கூறியுள்ளார். இதைக்கேட்ட பெற்றோர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

பின்னர் அந்த சிறுமியின் தந்தை குற்றம் சாட்டப்பட்ட சிறுவர்களின் குடும்பத்திடம் கூறியுள்ளார். ஆனால் அவர்கள் சிறுமியின் தந்தை கூறியதை நம்பாமல், அவரை விரட்டி அடித்துள்ளனர். இதுகுறித்து கிராமவாசிகளிடம் புகார் செய்தார், பின்னர் பஞ்சாயத்து அழைக்கப்பட்டது. பஞ்சாயத்தில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு சிறுவர்களும் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். அந்த சம்பவம் வீடியோ பதிவு செய்யப்பட்டு, மஹாராஜ்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்கள் சிறுமியின் பெற்றோர்கள். அந்த நான்கு சிறுவர்கள் மீதும் IPC மற்றும் POCSO சட்டத்தின் கீழ் வழக்கு செய்யப்பட்டு, தற்போது நான்கு சிறுவர்களும் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Trending News