புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அழைத்து வர சிறப்பு ரயில் தேவை -தாக்கரே

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்லும் வகையில் சிறப்பு ரயில்களை மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே கேட்டுக்கொண்டுள்ளார்.

Last Updated : Apr 22, 2020, 08:10 AM IST
புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அழைத்து வர சிறப்பு ரயில் தேவை -தாக்கரே title=

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்லும் வகையில் சிறப்பு ரயில்களை மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில்., "ஏப்ரல் 30 முதல் மே 15 வரை கொரோனா வைரஸ் தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று மையம் எதிர்பார்க்கிறது என்றால், புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கும் வகையில் சிறப்பு ரயில்களை ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான வழிகாட்டுதல்களை ஏப்ரல் மாத இறுதிக்குள் வெளியிடுமாறும் மகாராஷ்டிர முதல்வர் மத்திய அரசை வலியுறுத்தினார். "ஏப்ரல் 30 முதல் மே 15 வரை கோவிட் -19 பரிமாற்றம் அதிகரிக்கும் என்று மத்திய அரசு எதிர்பார்க்கிறது என்றால், புலம் பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த வீட்டிற்கு திருப்பி அனுப்ப சிறப்பு ரயில்களை ஏற்பாடு செய்யவும், இது குறித்த வழிகாட்டுதல்களை வெளியிடுவதற்கும் கையில் இருக்கும் நேரத்தைப் பயன்படுத்த முடியுமா என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.” என்றும் மகாராஷ்டிரா முதல்வரின் அலுவலகம் ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

தற்போது மகாராஷ்டிரா முழுவதும் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் வசித்து வரும் சுமார் 6 லட்சம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு மாநில அரசு உணவு, தங்குமிடம் மற்றும் மருத்துவ உதவிகளை செய்து வருகிறது என்றும் தாக்கரே குறிப்பிட்டுள்ளார்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பெரும்பான்மையானவர்கள் தங்கள் குடும்பங்களிலிருந்து விலகி இருப்பதால், தற்போதைய நிலைமை அவர்களுக்கு கடினமாக உள்ளது என குறிப்பிட்ட மகாராஷ்டிரா முதல்வர், மாநிலம் முழுவதும் அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட நிவாரண முகாம்களில் சுமார் 6 லட்சம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு, தங்குமிடம் மற்றும் மருத்துவ உதவி வழங்கப்படுகிறது. இருப்பினும், இதுபோன்ற காலங்களில் தங்கள் வீடுகளிலிருந்தும் குடும்பங்களிலிருந்தும் விலகி இருப்பது அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக ஏப்ரல் 18-ஆம் தேதி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த கரும்புத் தொழிலாளர்களை மகாராஷ்டிரா அரசு மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு தங்கள் கிராமங்களுக்குச் செல்ல அனுமதித்தது நினைவிருக்கலாம். இந்த தொழிலாளர்களின் பயணம் மற்றும் உணவுக்கான ஏற்பாடுகளை செய்யுமாறு சர்க்கரை ஆலை உரிமையாளர்களுக்கு மகாராஷ்டிரா அரசு உத்தரவிட்டது.

5,218 COVID-19 நோயாளிகளுடன் கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள மாநிலம் மகாராஷ்டிரா என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News