மக்களவைத் தேர்தல் 2019: 6ம் கட்ட வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெற்று வருகிறது

இன்று (மே 12) மொத்தம் 59 தொகுதிகளுக்கு வாக்குபதிவு நடைபெற்று வருகிறது

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 12, 2019, 09:04 AM IST
மக்களவைத் தேர்தல் 2019: 6ம் கட்ட வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெற்று வருகிறது title=

இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. 5 கட்ட தேர்தல் வாக்குப்பதிவுகள் முடிவடைந்துள்ள நிலையில், இன்று (மே 12) ஆறாம் கட்ட தேர்தலுக்கான வாக்குபதிவு நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 425 தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல் முடிவடைந்துள்ளது.  

மீதமுள்ள 118 தொகுதிகளுக்கு மே 12 மற்றும் மே 19 ஆம் தேதி என 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 23 ஆம் தேதி நடைபெறுகிறது. இன்று (மே 12) உத்திரபிரதேசத்தில் உள்ள 14 தொகுதிகள், மேற்குவங்கம், பீகார் மற்றும் மத்திய பிரதேசத்தில் தலா 8 தொகுதிகள், அரியானாவில் 10 தொகுதிகள், டில்லியில் 7 தொகுதிகள், ஜார்கண்டில் 4 தொகுதிகளுக்கு என மொத்தம் 59 தொகுதிகளுக்கு வாக்குபதிவு நடைபெற்று வருகிறது. 

இவற்றுடன் சேர்த்து ஏப்ரல் 11 ஆம் தேதி திரிபுராவில் முறைகேடு நடந்ததாக கூறப்படும் ஒரு ஓட்டுச்சாவடி மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு ஓட்டுச்சாவடி ஆகியவற்றில் மறுஓட்டுப்பதிவு நடைபெறுகிற. 

மொத்தம் 1.19 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் டெல்லியில் மட்டும் 13,819 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இன்யைய வாக்குபதிவில் உ.பி. மாநில முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர், மத்திய அமைச்சர் மேனகா காந்தி, டெல்லி முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீக்ஷித் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாக உள்ளனர். 

Trending News