கல்லூரி வளாகத்தில் மாணவி எரித்துக்கொன்ற காதலன்

கேரள மாநிலம், கோட்டயம் மருத்துவ கல்லூரி மாணவி லஷ்மி வயது 20 மீது பெட்ரோலை ஊற்றி பகிரங்க கொலை செய்யப்பட்டாள்.

Last Updated : Feb 2, 2017, 12:20 PM IST
கல்லூரி வளாகத்தில் மாணவி எரித்துக்கொன்ற காதலன் title=

கொச்சி: கேரள மாநிலம், கோட்டயம் மருத்துவ கல்லூரி மாணவி லஷ்மி வயது 20 மீது பெட்ரோலை ஊற்றி பகிரங்க கொலை செய்யப்பட்டாள்.

தன்னை விட்டு பிரிந்ததால், கல்லூரி வளாகத்தில் மாணவியை பெட்ரோல் ஊற்றி வாலிபர் ஒருவர் எரித்து கொன்றார். இந்த சம்பவத்தில் அவரும் மரணமடைந்தார்.

கேரள மாநிலம், கோட்டயம் மருத்துவ கல்லூரி முன்னாள் மாணவர் ஆதர்ஷ் மற்றும் அக்கலூரியில் படித்து வரும் லஷ்மிகாதலித்து வந்துள்ளனர். ஆனால், சில காரணங்களுக்காக லஷ்மி தனது காதலை முறித்துக்கொண்டார். இதனால் ஆதர்ஷ் சில நாட்களாக விரக்தியில் இருந்துள்ளார். 

இந்நிலையில் நேற்று லஷ்மி வகுப்பறையில் சக மாணவிகளுடன் இருந்தார். அப்போது அங்கு வந்த ஆதர்ஷ், லஷ்மி மீது பெட்ரோலை ஊற்றினார். 

இருப்பினும் தொடர்ந்து, துரத்தி வந்த ஆதர்ஷ், லைட்டர் மூலம் தீ வைத்தார். தொடர்ந்து ஆதர்ஷ், தன் மீதும் பெட்ரோல் ஊற்றி தீவைத்து கொண்டார். 

இந்த சம்பவத்தில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு இருவரும் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தனர். 

Trending News