J&K: 2 பயங்கரவாதிகள் குல்கம் பகுதியில் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொலை!

ஜம்மு காஷ்மீர் குல்கம் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்!  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 27, 2018, 10:06 AM IST
J&K: 2 பயங்கரவாதிகள் குல்கம் பகுதியில் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொலை! title=

ஜம்மு காஷ்மீர் குல்கம் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்!  

ஜம்மு&காஷ்மீர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்கம் மாவட்டத்தில் உள்ள ரெட்வானி பகுதியில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த ரகசிய தகவலின் பேரில், அப்பகுதிக்கு விரைந்து வந்த பாதுகாப்பு படையினர் ரெட்வானி கிராமத்தை சுற்றி வளைத்தனர். 

அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப்படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து, பாதுகாப்புப்படையினரும் பதிலடி கொடுத்துள்ளனர், சுமார் 3 மணி நேரத்துக்கும் மேல் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, மேலும் அங்கு தீவிரவாதிகள் பதுங்கியுள்ளனரா என தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. 

இதுகுறித்த மேலும் தகவலுக்கு காத்திருக்கவும்......

 

Trending News