ஜம்மு-வில் ஊடுருவ முயன்ற 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

ஜம்மு - காஷ்மீர் குப்வாரா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரால் தாக்குதலில் 6 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்திய எல்லை வழியாக ஊடுரும் முயன்ற தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

Last Updated : Jun 10, 2018, 03:11 PM IST
ஜம்மு-வில் ஊடுருவ முயன்ற 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை! title=

ஜம்மு - காஷ்மீர் குப்வாரா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரால் தாக்குதலில் 6 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்திய எல்லை வழியாக ஊடுரும் முயன்ற தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

ஜம்முவின் குப்வாரா மாவட்டத்திற்குள் கெரான் பிரிவில் அமைந்த எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் தீவிரவாதிகள் சிலர் ஊடுருவல் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். இதையடுத்து, குப்வாரா பகுதியில் எல்லைப்பகுதியில் பாதுகாப்பு படையினர் மற்றும் பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றது. 

இந்த துப்பாக்கி சண்டையில் சுமார் 6 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், குப்வாரா பகுதியில் மேலும் சில தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளாரா என பாதுகாப்பு படையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

முஸ்லிம்கள் நோன்பு இருக்கும் ரமலான் மாதத்தில் பாதுகாப்பு படையினர் தீவிரவாத தேடுதல் வேட்டையில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. எனினும், தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டால் அவர்கள் மீது பதில் தாக்குதல் நடத்தவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 

Trending News