ஜம்மு காஷ்மீர்: 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை, 1 கைது

Last Updated : Jul 26, 2016, 12:50 PM IST
ஜம்மு காஷ்மீர்: 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை, 1 கைது title=

ஜம்மு காஷ்மீரில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஒருவன் பிடிபட்டான். எல்லை பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். பயங்கரவாதிகள் ஊடுருவல் முயற்சியை முறியடித்து வந்தனர். 

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குபுவாரா மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் நவ்காம் செக்டாரில் பாதுகாப்பு படையினர் மற்றும் பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றது. துப்பாக்கி சண்டையில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று ராணுவ அதிகாரிகள் கூறிஉள்ளனர். 

”நவ்காம் செக்டாரில் நடைபெற்ற ஆப்ரேஷனில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர், ஒருவன் கைது செய்யப்பட்டான்,” என்று ராணுவம் தெரிவித்து உள்ளது.

பயங்கரவாதிகள் அனைவரும் வெளிநாட்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. என்கவுண்டர் நடைபெற்ற இடத்தில் இருந்து கடைசியாக கிடைத்த தகவலின்படி அங்கு இருதரப்பு இடையே சண்டை நடைபெறுவதாகவே தெரிவிக்கப்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. பயங்கரவாதிகளில் ஒருவனை நாங்கள் கைது செய்து உள்ளோம், அவனிடம் விசாரணை நடத்துகையில் மேற்கொண்டு அனைத்து தகவல்களும் வெளியாகும் என்று ராணுவம் தெரிவித்து உள்ளது.

Trending News