இன்சார்ட்-3 டி ஆர்: வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது

Last Updated : Sep 8, 2016, 06:35 PM IST
இன்சார்ட்-3 டி ஆர்: வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது title=

வானிலை சம்பந்தமான ஆராய்ச்சி மேற்கொள்ள செயற்கைக்கோள் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.

இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோ ஜி.எஸ்.எல்.வி. எப்-05 என்ற ராக்கெட் மூலம் இன்சாட்-3டி.ஆர். எனும் வானிலை ஆய்வுக்காக செயற்கைக்கோளை செலுத்த இருந்தது. 

அதன்படி ஆந்திரா மாநிலத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்துள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து, இன்று மாலை 4.10 மணிக்கு இந்த செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட தயாராக வைக்கப்பட்டது.. 

விண்ணில் செலுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ள நிலையில், இதற்கான 29 மணி நேர கவுன்ட்டவுன் நேற்று காலை 11:10 மணிக்கு துவங்கியது.

வானிலை சம்பந்தமான ஆராய்ச்சி மேற்கொள்ளவே 2-வது ஏவுதளத்தில் இருந்து இந்த செயற்கைக்கோள் 4.10 மணிக்கு விண்ணில் செலுத்த நேரம்  திட்டமிட்டு இருந்தது. ஆனால் 40 நிமிடம் தள்ளிவைக்கப்பட்டு 4.50 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த செயற்கை கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. வெற்றிகரமாக செயற்கைகோள் விண்ணில் நிலைநிறுத்தபட்டதையடுத்து விஞ்ஞானிகள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். இதன் ஆயுட்காலம் 10 ஆண்டுகள் ஆகும்.

Trending News