இந்தியா - இங்கிலாந்து 2வது டெஸ்ட்: இந்தியா 317/4 ரன்கள்!

Last Updated : Nov 17, 2016, 06:35 PM IST
இந்தியா - இங்கிலாந்து 2வது டெஸ்ட்: இந்தியா 317/4 ரன்கள்! title=

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான _2வது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டிணத்தில் உள்ள ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் கோலி பேட்டிங் தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி லோகேஷ் ராகுல் டக் அவுட்டானார். முரளி விஜய் 20 ரன்கள் எடுத்து அவுட்னார்.

தொடர்ந்து ஆடிய விராத் கோலி மற்றும் புஜாரா தங்கள் சதத்தை நிறைவு செய்தனர். 204 பந்துகளில் 12 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 119 ரன்கள் எடுத்த புஜாரா அவுட் ஆனார். பிறகு களமிறங்கிய ரஹானே 23 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். 

பின்னர் விராத் கோலியுடன் ஜோடி சேர்ந்து ரவிச்சந்திரன் அஸ்வின் ஆடி வருகிறார். 241 பந்துகளை இதுவரை சந்தித்துள்ள கேப்டன் விராட் கோலி 15 பவுண்டரிகள் உட்பட 151 ரன்களுடனும், அஸ்வின் 1 ரன்னுடனும் களத்தில் இருக்கின்றனர்.

இந்திய அணியின் கேப்டன் விராத் கோலிக்கு இது 50-வது டெஸ்ட் போட்டி. ஆகும். ராஜ்கோட்டில் நடந்த முதலாவது டெஸ்ட் டிராவில் முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News