73வது சுதந்திர தினம்: நாட்டின் முக்கிய பகுதிகள் பாதுகாப்பு வட்டத்திற்குள்...

நாட்டின் பெரிய நகரங்களில் அமைதியை சீர்குலைக்கும் நடவடிக்கையில் தீவரவாதிகள் ஈடுபடலாம் என்பதால்,  நாட்டின் அனைத்து முக்கிய பகுதிகள் பாதுகாப்பு வட்டதிற்குள் கொண்டுவரப்பட்டு உள்ளது.

Last Updated : Aug 15, 2019, 08:03 AM IST
73வது சுதந்திர தினம்: நாட்டின் முக்கிய பகுதிகள் பாதுகாப்பு வட்டத்திற்குள்... title=

புதுடில்லி: நாடு இன்று 73 வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது. ஆறாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் மூவர்ணக் கொடியை ஏற்றி உரையாற்றி வருகிறார். டெல்லி காவல்துறை விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. டெல்லி பாதுகாப்பு முகாமாக மாற்றப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஊழியர்கள் ரம்பிளில் நிறுத்தப்பட்டுள்ளனர். 

73 வது சுதந்திர தினத்தை அடுத்து தேசிய தலைநகரான டெல்லியின் பாதுகாப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது. டெல்லியின் நெரிசலான சந்தை பயங்கரவாதிகளின் இலக்காக இருந்து வருகிறது. எனவே பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டுள்ளது. டெல்லியின் அனைத்து சந்தை பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் முழுசோதனை செய்யப்படுகிறது. போலீசார் தொடர்ந்து பைக் மூலம் சந்தை மற்றும் அதன் சுற்றி உள்ள பகுதிகளில் ரோந்து செல்கின்றனர்.

அதே நேரத்தில், டெல்லியின் மையப்பகுதியான கனாட் பிளேஸில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தடிப்பு சுவர் மூலம் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. சி.சி.டி.வி கேமரா கண்காணிக்கப்படுகிறது. ஸ்னைப்பர்கள் உயரமான புல்டிங்கில் நிறுத்தப்பட்டுள்ளனர். அனைத்து எல்லைகளும் சீல் வைக்கப்பட்டுள்ளன. தேசிய விழா சுதந்திர தினத்தில் நாட்டின் பெரிய நகரங்களில் அமைதியை சீர்குலைக்கும் நடவடிக்கையில் தீவரவாதிகள் ஈடுபடலாம் என்பதால்,  நாட்டின் அனைத்து முக்கிய பகுதிகள் பாதுகாப்பு வட்டதிற்குள் கொண்டுவரப்பட்டு உள்ளது. 

Trending News