மளிகை, மருந்தகம் தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்படும் -முதல்வர் உத்தரவு!

நாட்டில் நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அனைத்து மால்களையும் (மளிகை, மருந்தகம் மற்றும் காய்கறி கடைகள் தவிர) மூடுவதாக அறிவித்துள்ளார்.

Last Updated : Mar 20, 2020, 02:22 PM IST
மளிகை, மருந்தகம் தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்படும் -முதல்வர் உத்தரவு! title=

நாட்டில் நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அனைத்து மால்களையும் (மளிகை, மருந்தகம் மற்றும் காய்கறி கடைகள் தவிர) மூடுவதாக அறிவித்துள்ளார்.

உலக மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ள கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது இந்தியாவையும் விட்டுவைக்காத நிலையில், தற்போது டெல்லி மக்களை பாதுகாக்கும் பொருட்டு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இந்த அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

முன்னதாக, வியாழக்கிழமை வீட்டு தனிமைப்படுத்தலில் இருப்பவர்கள் வெளியே செல்லக்கூடாது என்பதை உறுதிப்படுத்த முத்திரையிடப்படுவதாக டெல்லி முதல்வர் அறிவித்தார். மேலும் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான கட்டுப்பாடுகளை அதிகரித்து, தேசிய தலைநகரில் அனைத்து உணவகங்களும் மூடப்படும் என்று அறிவித்தார்.

இருப்பினும், அவர்கள் தொடர்ந்து விநியோகிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும், ஒரு கூட்டத்தில் உள்ளவர்களின் எண்ணிக்கையை 20-க்கும் குறைவாக இருக்க வேண்டும் என்றும் எச்சரித்துள்ளது.

அத்தியாவசியமற்ற பொது சேவைகளை அரசாங்கம் வரும் நாட்களில் நிறுத்தும் என்றும் கெஜ்ரிவால் கூறினார், ஆனால் விவரங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இதனிடையே முதல்வர் கெஜ்ரிவால், டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜலுடன் சேர்ந்து வைரஸைக் கையாள்வதற்கான அரசாங்கத்தின் தயாரிப்புகள் குறித்து மறுஆய்வுக் கூட்டத்தை நடத்தினார். கூட்டத்திற்கு பின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தெரிவித்த அவர், அத்தியாவசிய பொது சேவைகள் அனுமதிக்கப்படும் அதே வேளையில், அத்தியாவசியமற்ற பொது சேவைகள் வெள்ளிக்கிழமை முதல் அனுமதிக்கப்படாது, ஆனால் அது குறித்த விவரங்கள் இன்னும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன, விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்வித்தார்.

டெல்லியில் உள்ள மருத்துவமனை பணி நிலைமைகளில் இருப்பதை உறுதி செய்ய அரசாங்கம் உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. நகரத்தில் வென்டிலேட்டர்கள் போன்ற கேஜெட்களின் எண்ணிக்கையையும் அரசாங்கம் தயாரித்து வருகிறது என தெரிவித்த முதல்வர், குடியிருப்பாளர்களை பீதியடையாமல் இருக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

உலக மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ள கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 240,000-க்கும் அதிகமான மக்களை பாதித்துள்ளது, இதில் 194 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News