அம்மாவின் மருத்துவ செலவுக்கு உதவி கேட்ட சிறுமிக்கு நடந்த கொடூரம்

நாக்பூரில் ரூ.5000க்கு  சிறுமியை விற்ற கொடூரச் சம்பவம் நடந்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 3, 2021, 07:14 AM IST
அம்மாவின் மருத்துவ செலவுக்கு உதவி கேட்ட சிறுமிக்கு நடந்த கொடூரம் title=

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த 11 வயது சிறுமியின் தாயாருக்கு புற்றுநோய் இருப்பதை கண்டறியப்பட்டுள்ளது. மிகவும் ஏழ்மையான நிலையில் இருந்தது ஆக்குடும்பம். அதன்படி தனது தாய்க்கு மருந்து வாங்க பணத்திற்கு என்ன செய்ய வேண்டுமென்று அந்த 11 வயது சிறுமிக்கு தெரியவில்லை. 

இந்நிலையில் இவர்களது குடும்ப சூழ்நிலையை பயன்படுத்தி கொண்டார் அதே பகுதியில் இருந்த அர்ச்சனா என்ற பெண். இவருக்கு பாலியல் தொழிலில் சிறுமிகளுக்கு என்று தனி மார்க்கெட் இருக்கிறதாம். அதனால், 11 வயதே நிரம்பிய சிறுமியை புதிதாக பாலியல் தொழிலில் இறக்கினால் நல்ல பணம் சம்பாதிக்கலாம் என்று திட்டமிட்டு இன்னும் சில இடைத்தரகர்களோடு சேர்ந்து திட்டமிட்டுள்ளார்.

ALSO READ | நாமக்கல்லில் நடுங்க வைக்கும் சம்பவம்: சிறுமி பாலியல் வன்கொடுமை, 12 பேர் கைது

அப்போது அந்தச் சிறுமிக்கு அர்ச்சனா என்ற பெண் சிறுமிக்கு உதவுவதாகக் கூறியுள்ளார். சிறுமியின் தாயிடம் பேசிய அர்ச்சனா, தனது மகனின் பிறந்தநாள் விழா வருகிறது. அன்றைய தினம் மகனைப் பார்த்துக் கொள்ள ஆள் தேவை. அதற்காக சிறுமியை அழைத்துச் செல்கிறேன். அதற்கு கூலியாக ரூ.5000 தருகிறேன் என்று கூறியுள்ளார். சிறுமியின் தாயாரும் சரியென்று அனுப்பியுள்ளார். அதன்படி அர்ச்சனா, ரஞ்சனா, கவிதா ஆகிய மூவர் அச்சிறுமியை கொராடி ஓம் நகர் எனும் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஏற்கெனவே சிறுமியைப் பற்றி பாலியல் வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்து இருந்த நிலையில் இந்த தகவல் பலருக்கும் வாட்ஸ் அப் மூலம் பரவ ஒரு நபர் ரூ.40,000 தருவதாகக் கூறியுள்ளார். 

இந்நிலையில் அந்த நபரிடமே சிறுமியை அனுப்புவது என்று பேசி முடிக்கப்பட்டது. மேலும் அந்த மூன்று பெண்களும் சொன்ன இடத்துக்கு அந்த நபர் வர சிறுமியை அவரிடன் அனுப்பியுள்ளனர். ஆனால், அந்த நபர் ஒரு போலீஸ் இன்ஃபார்மர். அவர் உடனே போலீஸுக்கு தகவல் கூறி அந்த வீட்டை சுற்றி வளைத்தனர். மேலும் உடனடியாக அந்த சிறுமியும் போலீஸ் பாதுகாப்புக்குள் கொண்டு வரப்பட்டார். தற்போது அந்த சிறுமி அரசு காப்பகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | Shocking! 3 வாரங்களில் 5 பெண்களை பலாத்காரம் செய்த 14 வயது சிறுவன் கைது!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News