விமான நிலையங்களில் கைப்பைக்கு பாதுகாப்பு முத்திரை இருக்காது

Last Updated : Dec 13, 2016, 05:00 PM IST
விமான நிலையங்களில் கைப்பைக்கு பாதுகாப்பு முத்திரை இருக்காது title=

சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஐதராபாத், பெங்களூரு போன்ற ஆறு விமான நிலையங்களில் பயணிகள் கொண்டு செல்லும் சூட்கேஸ் உள்ளிட்ட உடைமைகளின் சோதனை நடை முறையின் போது பாதுகாப்பு முத்திரை பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் விமான அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் படை அதிகாரிகள் கடந்த வாரம் பங்கேற்றனர். இதில் விமானப் பயணிகளுக்கு ஏற்ப பாதுகாப்பு நடைமுறைகளை சற்று மாற்றி அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் அதிகாரிகள் கூறியதாவது:-  சென்னை, தில்லி, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூரு ஆகிய 6 விமான நிலையங்களில் டிசம்பர் 15-ஆம் தேதி முதல் முன்னோடித் திட்டமாக பயணிகளின் உடைமைகளை சோதிக்கும் நடைமுறையில் சிறிய அளவில் மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி பாதுகாப்புப் படையினரால் பரிசோதனை செய்யப்பட்ட சூட்கேஸ் மற்றும் பேக் போன்றவற்றில் "பாதுகாப்பு ஸ்டிக்கர்' ஒட்டப்பட மாட்டாது. விமானத்துக்குள் பயணிகள் எடுத்துச் செல்லும் கைப்பை, பேக்குகளில் சிறிய சீட்டை தொங்கவிட்டு அதில் பரிசோதித்ததற்கான முத்திரையிடும் நடைமுறையும் கைவிடப்படுகிறது. பயணிகளுக்கு நடைமுறை சிரமத்தைக் குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதுகாப்பில் எவ்வித குறைபாடும் இருக்காது என கூறினார்.

மேலும் வருகிற 15-ம் தேதி முதல் 6 விமான நிலையங்களில் அமலுக்கு வருகிறது. இது வெற்றிகரமாக செயல்பட்டால் நாட்டின் மற்ற விமான நிலையங்களுக்கும் விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டும் எனவும் கூறினார்.

Trending News