விரைவில் அனைத்து காரிலும் ஏர் பேக்?

Last Updated : Oct 29, 2017, 04:12 PM IST
விரைவில் அனைத்து காரிலும் ஏர் பேக்? title=

ஏர் பேக், சீட் பெல்ட் நினைவூட்டும் கருவி, வேக கட்டுப்பாடு கருவி, ரிவர்ஸ் கியர் எச்சரிக்கை, அவசர காலங்களில் வெளியேறும் வகையிலான சென்ட்ரல் லாக்கிங் சிஸ்டம் ஆகியவை வரும் 2019 ஜூலை 1-ம் தேதிக்குப் பிறகு தயாரிக்கப்படும் அனைத்து கார்களிலும் கட்டாயம் இடம்பெற வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட முடிவு செய்துள்ளது. 

இந்த வசதிகள் அனைத்தும் சொகுசு கார்களிலில் உள்ளது. சாலை விபத்துகளில் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதால், மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

இது தொடர்பாக போக்குவரத்து அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையதாவது:-

புதிதாக தயாரிக்கப்பட உள்ள கார்களில் வேக கட்டுப்பாடு கருவி பொருத்தப்பட உள்ளது. ரிவர்ஸ் கியரில் காரை நிறுத்தும் போது, விபத்து ஏற்படாமல் இருக்க எச்சரிக்கை கருவி பொருத்தப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Trending News