மம்தா பானர்ஜி - திரிணமூல் காங்கிரஸ் தலைவராக மீண்டும் தேர்வு

Last Updated : Apr 22, 2017, 10:37 AM IST
மம்தா பானர்ஜி - திரிணமூல் காங்கிரஸ் தலைவராக மீண்டும் தேர்வு title=

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவராக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கொல்கத்தாவில் உள்ள நேதாஜி உள்விளையாட்டு அரங்கில் மம்தா பானர்ஜி முன்னிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. 

இதையடுத்து, அக்கட்சியின் துணைத் தலைவர் முகுல் ராய் செய்தியாளர்களிடம் கூறுகையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவராக மம்தா பானர்ஜி அடுத்த 6 ஆண்டுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார் எனக் கூறினார்.

இதையடுத்து, மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் பேசியதாவது:

என்னிடமிருக்கும் பொறுப்பை பிறரிடம் அளித்தால் நன்றாக இருக்குமென்று நான் நினைக்கிறேன். அப்போதுதான், பிற பணிகளில் என்னால் கவனத்தைச் செலுத்த முடியும். தலைவர்களுக்கு அல்லாமல், தொண்டர்களுக்குதான் நான் எப்போதும் முக்கியத்துவம் கொடுப்பேன். ஏனெனில், கட்சிக்கு தொண்டர்கள்தான் சொத்து. மக்களுக்காக திரிணமூல் காங்கிரஸ் கட்சி எப்போதும் பணியாற்றும் என்றார் மம்தா பானர்ஜி.

Trending News