இந்தியாவில் அன்னிய நேரடி முதலீடு 6196 கோடி டாலராக உயர்வு!

கடந்த நிதியாண்டில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட நேரடி அன்னிய முதலீடு 6,196 கோடி டாலர் என்று மத்திய தொழில் கொள்கை மற்றும் மேம்பாடுத் துறையின் செயலர் ரமேஷ் அபிஷேக் தெரிவித்துள்ளார்!

Last Updated : Jun 9, 2018, 07:12 PM IST
இந்தியாவில் அன்னிய நேரடி முதலீடு 6196 கோடி டாலராக உயர்வு! title=

கடந்த நிதியாண்டில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட நேரடி அன்னிய முதலீடு 6,196 கோடி டாலர் என்று மத்திய தொழில் கொள்கை மற்றும் மேம்பாடுத் துறையின் செயலர் ரமேஷ் அபிஷேக் தெரிவித்துள்ளார்!

இதற்கு முந்தைய நிதி ஆண்டில் 6,000 கோடி டாலராக இருந்த அன்னிய நேரடி முதலீடு கடந்த நிதியாண்டில் 6,196-ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

அன்னிய முதலீடு குறித்து விளக்கமளித்த அவர் கடந்த 4 ஆண்டுகளில் அன்னிய நேரடி முதலீடு தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளதாக தெரிவித்தார். இந்நிலையில் அன்னிய நேரடி முதலீடு ஒட்டுமொத்தமாக 22,275 கோடி டாலர் வந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முந்தைய 4 ஆண்டுகளில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட அன்னிய நேரடி முதலீடு 15,200 கோடி டாலர், தற்போதைய நாண்கு ஆண்டுகளில் 22,275 கோடி டாலராக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

எனினும் ஐக்கிய நாடுகள் சபை அமைப்பான UNCTAD வெளியிட்டுள்ள அறிக்கையின் படி கடந்த 2017-ம் ஆண்டில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட அன்னிய நேரடி முதலீடு 4 ஆயிரம் கோடி டாலர் எனவும், 2016-ஆம் ஆண்டில் 4,400 கோடி டாலராக இருந்ததாகவும் தெரிவித்துள்ளது.

Trending News