காஷ்மீரில் கனமழை: ஜீலம் ஆற்றில் வெள்ள அபாயம் எச்சரிக்கை!

ஜம்மு காஷ்மீரில் பெய்துவரும் கனமழையால் ஜீலம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது! 

Last Updated : Jun 30, 2018, 11:30 AM IST
காஷ்மீரில் கனமழை: ஜீலம் ஆற்றில் வெள்ள அபாயம் எச்சரிக்கை! title=

ஜம்மு காஷ்மீரில் பெய்துவரும் கனமழையால் ஜீலம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது! 

வட மாநிலங்களில் பெய்து வரும் தொடர் கனமழையால் பல மாநிலங்களில், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழையால் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. 

இதனையடுத்து அனந்த்நாக் மாவட்டம் சங்கம் பகுதியில், ஜீலம் ஆற்றில் வெள்ளநீர் அபாய கட்டத்தை எட்டியுள்ளது. கன மழை காரணமாக மலைப்பாங்கான சில பகுதிகளில் லேசான நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக மக்கள் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து காஷ்மீரில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. 

 

Trending News