மும்பை சாலை விபத்தில் 5 பேர் பரிதாப பலி!

மகாராஸ்டிர மாநிலம் பால்கர் பகுதியில், வேகமாக சென்ற கார் விபத்துக்குள்ளானதில் 5 பேர் உடல் நசுங்கி பலியாகினர்!

Last Updated : Feb 7, 2018, 05:02 PM IST
மும்பை சாலை விபத்தில் 5 பேர் பரிதாப பலி! title=

மும்பை: மகாராஸ்டிர மாநிலம் பால்கர் பகுதியில், வேகமாக சென்ற கார் விபத்துக்குள்ளானதில் 5 பேர் உடல் நசுங்கி பலியாகினர்!

இந்த விபத்தானது, இன்று விடியற்காலை சுமார் 3 மணியளவில் நிகழ்ந்துள்ளது. விபத்துக்குள்ளான கார் பால்கர் நகரை நோக்கி வாடராய் கிராமத்தின் வழியாக பயணித்தப்போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

அதிக வேகத்தில் சென்ற கார் தனது கட்டுபாட்டை இழந்து சாலை அருகே இருந்த மரத்தின் மீது மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவத்தில் பலியானவர்கள் அனைவரும் சுமார் 25 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்திற்கு பின்னர் அவ்வழியே சென்ற மற்றொரு கார் ஓட்டுனர் இந்த விபத்தினை குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

பலியானவர்களின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.

Trending News