இரண்டு நாட்களாக தொடரும் தீ விபத்து- 4 பேர் பலி!!

குஜராத்தில் உள்ள ஒரு மளிகை கடையில் தீடிரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 

Last Updated : Jan 9, 2018, 09:59 AM IST
இரண்டு நாட்களாக தொடரும் தீ விபத்து- 4 பேர் பலி!! title=

குஜராத்தில் உள்ள அஹமதாபாத் நாரன்பூர் பகுதியில் ஒரு மளிகை கடையில் தீடிரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.இதில்சம்பவ இடத்திலேயே  4 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று காலை சுமார் 7 மணியளவில் இந்த கட்டிடத்தில் மூன்றாவது தளத்தில் தீ பிடித்து எரிவதாக தீ அணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது.

சம்ப இடத்திருக்கு விரைந்து வந்த விரைந்து வந்த மூன்று தீ அணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

மற்ற பகுதிக்கும் தீ பரவுகிறது. இந்த விபத்தில் ஏற்பட்ட அசம்பாவிதம் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. தீ விபத்துக்கான காரணம் பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

நேற்று ஒரே நாளில் பெங்களூரு மதுபான விடுதி மற்றும் மும்பை நீதிமன்றகோரக்பூர் மருத்துவ கல்லூரி தீ விபத்தினை தொடர்ந்து தற்போது, மும்பையில் ரிய் சாலையில் சாவ்ல் தேக்கிவைப்பு இடத்தில் திடீர் தீவிபத்து. அடுத்தபடியாக குஜராத்தில் உள்ள ஒரு மளிகை கடையில் தீடிரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending News