மது பாட்டில்களை விற்க புதிய நடைமுறை கொண்டுவரும் அரசு!

புதுடெல்லியின் இனி மது பாட்டில்களை விற்க புதிய நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என  டெல்லி அரசின் கலால் துறை தனித்துவமான உத்தரவை பிறப்பித்துள்ளது. 

Last Updated : Aug 29, 2019, 03:10 PM IST
மது பாட்டில்களை விற்க புதிய நடைமுறை கொண்டுவரும் அரசு! title=

புதுடெல்லியின் இனி மது பாட்டில்களை விற்க புதிய நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என  டெல்லி அரசின் கலால் துறை தனித்துவமான உத்தரவை பிறப்பித்துள்ளது. 

டெல்லி கலால் துறையின் உத்தரவின்படி, மதுக்கடையில் மது விநியோகிக்கப்படும் மது பாட்டில்களுக்கான அவகாசம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவின் படி திறந்த பெட்டியில் எடுக்கப்படும் மதுபான பாட்டில்கள் மூன்று முதல் எட்டு நாட்களுக்குள் விற்பது கட்டாயமாகும். காலக்கெடு காலாவதியான ஏழு நாட்களுக்குள் பங்கு காலாவதியாக வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

அதாவது திறந்த பீர், ஒயின் மற்றும் ஷாம்பெயின் பாட்டில்களை 3 நாட்களுக்குள் விற்று தீர்க்க வேண்டும். இவை தவிர, ரூ .1500 வரையிலான மது பாட்டில்களை 5 நாட்களுக்குள் விற்க வேண்டும். ரூ .1500 முதல் ரூ. 6000 வரையுள்ள மதுபாட்டில் 8 நாட்களுக்கு முன்னதாக விற்று தீர்க்க வேண்டும்.

மது பாட்டிகளில் கலப்படம் செய்யப்பட்டு நிரப்பப்பட்டு விற்பனை செய்யப்படும் மது ஊழல்களை தடுக்க இந்த அறிவிப்பு வெளியடப்பட்டு இருப்பதாக டெல்லி அரசு தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பா டெல்லி அரசு தெரிவிக்கையில்., கலப்பட மது பாட்டில்கள் மது சந்தையில் அதிக அளவில் விநியோகிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தது. பல முறை, பழைய பங்குகளுக்கு பதிலாக புதிய பங்குகள் பயன்படுத்தப்பட்டன எனவும் புகார்கள் எழுந்தன, இது விதிகளை மீறிய செயலாகும்.  இதனை கட்டுக்குள் கொண்டுவர இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக டெல்லி அரசு தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தின் இந்த உத்தரவின்படி, புதிய காலாவதி நாட்களுக்கு மீறி விற்கப்படும் அனைத்து பாட்டில்களும் காலாவதியான பிறகு பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும். இந்த உத்தரவு ஆகஸ்ட் 31 முதல் நடைமுறைக்கு வரத் தொடங்கும் எனவும் அறிவிகப்பட்டுள்ளது.

Trending News