சபரிமலையில் தரிசனம் செய்த 2 பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க கேரள Govt-க்கு உத்தரவு....

சபரிமலையில் தரிசனம் செய்த பிந்து, கனகதுர்கா ஆகிய இரு பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.....

Last Updated : Jan 18, 2019, 01:02 PM IST
சபரிமலையில் தரிசனம் செய்த 2 பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க கேரள Govt-க்கு உத்தரவு....  title=

சபரிமலையில் தரிசனம் செய்த பிந்து, கனகதுர்கா ஆகிய இரு பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.....

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று கடந்த செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பை எதிர்த்து தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் சார்பில் 48 சீராய்வு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு பின்னர் இந்த மனுக்களை விசாரணைக்கு ஏற்பதாக என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான அமர்வு முடிவு செய்தது. மேலும் வரும் ஜனவரி மாதம் 22-ஆம் நாள் முதல் சீராய்வு மனுக்கள் மீது விசாரணை நடைபெறும் என்றும் அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து சபரிமலை செல்வதற்கு ஆண்களும், பெண்களுமாய் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த வாரம் திருநங்கைகள் 4 பேர் சபரிமலைக்கு தரிசனம் செய்ய முயன்றபோது காவல்துறையினரால் தடுக்கப்பட்டனர். இதன் பின்னர் உயர் நீதிமன்ற குழுவினர் முறையிட்டதையடுத்து, பலத்த பாதுகாப்புடன் திருநங்கைகள் 4 பேரும் மறுநாள் தரிசனம் செய்தனர். 

இதை தொடர்ந்து, சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் இரண்டு பெண்கள் சாமி தரிசனம் செய்த வீடியோ தற்போது வெளியாகி இருக்கிறது. இன்று காலை 3.45 மணிக்கு அவர்கள் தரிசனம் செய்துள்ளனர் என காவல்துறையினர் தெரிவத்தனர்.  கேரள காவல்துறை பாதுகாப்புடன் பிந்து மற்றும் கனகதுர்கா ஆகியோர் சாமி தரிசனம் செய்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவியது. 

இதனையடுத்து கனகதுர்காவை அவரது மாமியார் தாக்கி உள்ளார். எனவே தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று பிந்து  மற்றும் கனகதுர்கா ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 

அந்த வழக்கில் இன்று நீதிமன்றம்  தீர்ப்பு வழங்கி உள்ளது. அதில் அவர்களுக்கு கேரள அரசு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. மேலும், சபரிமலையில் இதுவரை 50 வயதுக்கு உட்பட்ட 10 வயதுக்கு மேற்பட்ட 51 பெண்கள் தரிசனம் செய்துள்ளதாக கேரளா அரசு தெரிவித்துள்ளது.   

 

Trending News