ஜம்முவில் பாதுகாப்பு படையினரால் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு- காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரால் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை! 

Last Updated : Jul 22, 2018, 09:46 AM IST
ஜம்முவில் பாதுகாப்பு படையினரால் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை title=

ஜம்மு- காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரால் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை! 

ஜம்மு காஷ்மீரில் காவலராக பணியாற்றிய முகம்மது சலீம் என்பவர் குல்காமில் உள்ள தனது வீட்டுக்குச் சென்றுள்ளார். இதையடுத்து, நேற்று அவரை பயங்கரவாதிகள் கடத்திச் சென்றனர். அதன் பின்னர் அப்பகுதியில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது.

இதை தொடர்ந்து, ஜம்மு- காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் போலீசார், ராணுவம் மற்றும் சிஆர்பிஎப் ஆகிய படை வீரர்கள் சிறப்பு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த தேடுதலில் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தை வீரர்கள் சுற்றி வளைத்தனர். சில மணி நேர சண்டைக்கு பிறகு 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

காவலர் முகமது சலீமை கடத்திக் கொலை செய்த பயங்கரவாதிகள் 3 பேரும் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதை தொடர்ந்து, இன்னும் அங்கு தேடுதல் வேட்டை நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Trending News