பொருளாதார மந்தநிலை கவலை; ரகுராம் ராஜன் வேதனை!

பொருளாதார மந்தநிலை கவலை அளிப்பதாகவும், புதிய சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் ரகுராம் ராஜன் யோசனை தெரிவித்துள்ளார்.

Last Updated : Aug 20, 2019, 06:43 AM IST
பொருளாதார மந்தநிலை கவலை; ரகுராம் ராஜன் வேதனை! title=

பொருளாதார மந்தநிலை கவலை அளிப்பதாகவும், புதிய சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் ரகுராம் ராஜன் யோசனை தெரிவித்துள்ளார்.

ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், இந்தியாவின் பொருளாதார மந்தநிலை கவலை அளிக்கிறது. பொருளாதார வளர்ச்சி விகிதம் 6.8%-மாக குறைந்து விட்டது. கடந்த 2014-ம் ஆண்டிலிருந்து இதுதான் குறைந்த அளவாகும். மொத்த உள்நாட்டு உற்பத்தி, 7%-க்கும் குறைவாகவே இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.

இந்த நேரத்தில், பொருளாதாரத்தையும், வளர்ச்சி விகிதத்தையும் அதிகரிக்க புதிய சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும். சர்வதேச சந்தையில் கடன் பெறுவது சீர்திருத்தம் அல்ல, அது தந்திர நடவடிக்கை.

மின்சார துறை, வங்கிசாரா நிதி நிறுவனங்கள் ஆகியவற்றில் உள்ள பிரச்சினைகளை உடனடியாக களைய வேண்டும். தனியார் துறையினர் முதலீடு செய்வதை தூண்டும்வகையில் சீர்திருத்தம் அமைதல் வேண்டும். தற்போதுள்ள கடினமான சூழ்நிலையில், ஊக்கச்சலுகைகள் நீண்டகால பலன் அளிக்காது.

முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் கூறியதுபோல், நாம் நமது மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தை அதிகமாக மதிப்பிட்டு விட்டோம். அதனை சரியான கண்ணோட்டத்துடன் மதிப்பிட வேண்டும்.

2008-ஆம் ஆண்டை போன்ற பெரிய பொருளாதார வீழ்ச்சி, மீண்டும் ஏற்படாது என்று என்னால் கணித்து கூற முடியாது. ஆனால், அப்படி ஏற்பட்டால், அது வேறு காரணங்களால்தான் ஏற்படும். தற்போதைய பிரச்சினைகளை களைந்தாலும், புதிய பிரச்சினைகள் வருவதை தடுக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

Trending News