மோடியின் கருத்தை தவறாக விளக்க வேண்டாம் -ஜெய்சங்கர்!

பிரதமர் நரேந்திர மோடியின் 'ஆப் கி பார் டிரம்ப் சர்க்கார்' கோஷம் குறித்து வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் திங்கள்கிழமை தெளிவுபடுத்தினார்!

Last Updated : Oct 1, 2019, 09:57 AM IST
மோடியின் கருத்தை தவறாக விளக்க வேண்டாம் -ஜெய்சங்கர்! title=

பிரதமர் நரேந்திர மோடியின் 'ஆப் கி பார் டிரம்ப் சர்க்கார்' கோஷம் குறித்து வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் திங்கள்கிழமை தெளிவுபடுத்தினார்!

அமெரிக்காவின் உள்நாட்டு அரசியலுக்கு வரும்போது இந்தியா ஒரு பாகுபாடற்ற நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது என்பதை 'ஆப் கி பார் டிரம்ப் சர்க்கார்' கோஷம் வலியுறுத்தியது என ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

ஹூஸ்டனில் நடந்த 'ஹவுடி மோடி' நிகழ்வின் போது பிரதமர் மோடி இந்த முழக்கத்தை பயன்படுத்தினார். இந்த பேரணியில் 50,000 க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர், பெரும்பாண்மை இந்திய அமெரிக்கர்கள் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் மிகப்பெரிய வெற்றிகரமான இந்த நிகழ்வின் போது கலந்து கொண்டனர். 

இந்நிலையில் தற்போது அமெரிக்காவுக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டுள்ள ஜெய்சங்கர், பிரதமர் மோடி 2016-ல் தனது ஜனாதிபதி பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடிக்கு என்ன சொன்னார் என்பதை மட்டுமே குறிப்பிடுகிறார் என்று தெரிவித்தார்.

மேலும், டிரம்ப் தனது மறுதேர்தல் பிரச்சாரத்திற்கு வேட்புமனுவை ஆதரிக்க பிரதமர் மோடியால் இந்த முழக்கம் பயன்படுத்தப்பட்டது என்ற கருத்தை மத்திய அமைச்சர் கடுமையாக நிராகரித்தார். "பிரதமர் கூறியதை தயவுசெய்து கவனமாக பாருங்கள். வேட்பாளர் டிரம்ப் இதைப் பயன்படுத்தினார் (ஆப் கி பார் டிரம்ப் சர்க்கார்) என்றே பிரதமர் மோடி தெரிவித்தார். ஆக பிரதமர் கடந்த காலத்தைப் பற்றி பேசுகிறார். அதாவது பிரதமர் சொல்லப்பட்டதை தவறாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்று தான் கூற விரும்புகிறேன். அவர் கூறியதை தவறாக திரித்து நாம் சொல்லும் பட்சத்தில், நாம் யாரும் ஒரு நல்ல சேவையைச் செய்வதாக நான் நினைக்கவில்லை,” என்று ஜெய்சங்கர் வாஷிங்டனில் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

முன்னதாக கடந்த செப்டம்பர் 22-ம் தேதி நடந்த 'ஹவுடி, மோடி' நிகழ்வின் போது, ​​இந்தியா டிரம்புடன் நன்றாக தொடர்பு கொண்டுள்ளது என்று பிரதமர் கூறியிருந்தார். மேலும் “வேட்பாளர் டிரம்பின், அப் கி பார் டிரம்ப் சர்க்கார் வார்த்தைகள் சத்தமாகவும் தெளிவாகவும் ஒலித்தன. வெள்ளை மாளிகையில் அவர் தீபாவளியைக் கொண்டாடியது மில்லியன் கணக்கான முகங்களை மகிழ்ச்சியுடனும், பாராட்டுதலுடனும் வெளிச்சம் போட்டுக் காட்டியது,” என்று பார்வையாளர்களின் இடி முழக்கங்களுக்கு மத்தியில் மோடி குறிப்பிட்டிருந்தார்.

Trending News