வாலிபரின் உயிரை பலி வாங்கிய செல்(பி)போன்!

டெல்லியை சேர்ந்த 18 வயது வாலிபர் ஒருவர் ரயில்வே தண்டவாளத்தை கடக்கும் போது ரயில் மோதி உயிர் இழந்தார்.

Last Updated : Oct 4, 2017, 12:03 PM IST
வாலிபரின் உயிரை பலி வாங்கிய செல்(பி)போன்! title=

புது டெல்லி: டெல்லியை சேர்ந்த 18 வயது வாலிபர் ஒருவர் ரயில்வே தண்டவாளத்தை கடக்கும் போது ரயில் மோதி உயிர் இழந்தார்.

சம்பவத்தில் இறந்தவர் சீலாம்பூரின் குடியிருப்பை அர்பாஸ் கான் என தெரியவந்துள்ளது. 

தண்டவாளத்தை கடக்கும் போது அவர் தனது தொலைபேசியில் காதணிகள் செருகப்பட்ட நிலையில் கடந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். எனவே அவர் ரயில்வே தண்டவாளங்களை கடக்கும்போது இசை கேட்டுக்கொண்டு சென்றிருக்கலாம் அல்லது செல்பி(தன்படம்) என காவல்துறை சந்தேகிப்பதாக தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்தினையும் ஆராய்ந்த வரையில் தற்கொலைக்கான தடையங்கள் இல்லை எனவும். இது ஒரு விபத்தாக தான் இருக்கும் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். எனினும் இச்சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் யாரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News