டெல்லியில் ராஜ்தானி விரைவு ரயில் தடம் புரண்டது; மக்கள் சேப்

டெல்லி-ராஞ்சி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலின் இன்ஜின் மற்றும் பவர் கோச் தடம்புரண்டன. இந்த விபத்து டெல்லியில் உள்ள மின்டோ பாலம் அருகில் நடைபெற்றது.

Last Updated : Sep 7, 2017, 01:21 PM IST
டெல்லியில் ராஜ்தானி விரைவு ரயில் தடம் புரண்டது; மக்கள் சேப் title=

புதுடெல்லி: டெல்லி-ராஞ்சி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலின் இன்ஜின் மற்றும் பவர் கோச் தடம்புரண்டன. இந்த விபத்து டெல்லியில் உள்ள மின்டோ பாலம் அருகில் நடைபெற்றது.

வடமேற்கு ரயில்வே செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், இதுவரை அதிஷ்டவசமாக இந்த விபத்தில் எந்த இழப்பும் இல்லை என்று அறிவிக்கப்படவில்லை.

தற்போது இந்த விபத்துக்கான காரணம் தெரியப்படவில்லை. இந்த  விபத்து இன்று காலை 11:45 மணியளவில் நடைபெற்றது.

முன்னதாக இன்று காலை உத்தரப்பிரதேச ஹவுரா-ஜபல்பூர்-சக்திபுஞ்ச் எக்ஸ்பிரஸ் ரயிலின் 7 பெட்டிகள் ஓராவுக்கு அருகே தடம் புரண்டு விபத்து ஏற்ப்பட்டது.

Trending News