Covid-19 Lockdown: மேற்கு வங்க மாநிலத்தில் ஊரடங்கு காலத்தை ஜூலை 31 வரை நீட்டிக்கிறது

மேற்கு வங்க மாநிலத்தில் புதிய கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால், அம்மாநில அரசு ஜூலை 31 வரை ஊரடங்கை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 24, 2020, 08:36 PM IST
  • முன்னதாக இன்று, முதலமைச்சர் மம்தா பானர்ஜி அனைத்து கட்சி கூட்டத்தை நடத்தினார்
  • மேற்கு வங்கத்தில் இதுவரை 14,728 உறுதிப்படுத்தப்பட்ட COVID-19 தொற்று பதிவாகியுள்ளன
  • மாநிலத்தில் 580 பேர் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்
Covid-19 Lockdown: மேற்கு வங்க மாநிலத்தில் ஊரடங்கு காலத்தை ஜூலை 31 வரை நீட்டிக்கிறது title=

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் புதிய கொரோனா வைரஸ் (Coronavirus) தொற்று அதிகரித்து வருவதால், அம்மாநில அரசு ஜூலை 31 வரை ஊரடங்கை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது.

முன்னதாக இன்று, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி (Chief Minister Mamata Banerjee) மாநிலத்தின் கோவிட் -19 நிலைமை தொடர்பாக கொல்கத்தாவின் நபன்னாவில் அனைத்து கட்சி கூட்டத்தை நடத்தினார்.

இந்த கூட்டத்தில் பாஜகவின் மேற்கு வங்க பிரிவின் தலைவர் திலீப் கோஷ், பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த மனோஜ் ஹவுலதர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஸ்வாபன் பானர்ஜி, காங்கிரஸைச் சேர்ந்த பிரதீப் பட்டாச்சார்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.

மத்திய சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, மேற்கு வங்கத்தில் (Coronavirus in West Bengal) மொத்தம் 14,728 உறுதிப்படுத்தப்பட்ட COVID-19 தொற்று உள்ளன. அவற்றில் 580 பேர் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

 

ஆலோசனை கூட்டத்தை அடுத்து பேசிய மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, "இதை அரசாங்க முடிவாக நான் அறிவிக்கிறேன், நாடு முழுவதும் அதிகரித்து வரும் COVID-19 எண்ணிக்கைக்கு மத்தியில் வங்காளத்தில் ஊரடங்கு காலம் (Corona Lockdown) நீட்டிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் லாக்-டவுன் நாட்டிற்கும் உதவும் வகையில் உள்ளது. எங்கள் தளர்வுகள் தொடரும். பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஜூலை 31 வரை மூடப்படும் அரசு அலுவலகங்களைப் பொருத்தவரை, தற்போது செயல்படுவதை போல தொடரும்" என்று மாநில செயலகத்தை ஒட்டியுள்ள ஒரு ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற கூட்டத்திற்குப் பிறகு மம்தா பானர்ஜி கூறினார்.

எவ்வாறாயினும், தற்போதுள்ள தளர்வுகள் தொடரும் என்று மாநில அரசு தெளிவுபடுத்தியது. மேற்கு வங்கத்தில் நடந்து வரும், தற்போதைய ஊரடங்கு காலம் ஜூன் 30 அன்று முடிவடையவிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News