ஹரியானாவில் கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம்!!

ஹரியானாவில் கல்லூரி மாணவி ஒருவரை, பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Last Updated : Jan 19, 2018, 10:39 AM IST
ஹரியானாவில் கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம்!! title=

ஹரியானாவில் உள்ள குருகுராம் மாவட்டத்தில் பாரூக்நகர் பகுதியில், கல்லூரியில் இருந்து வீட்டிற்கு திரும்பிய கல்லூரி மாணவி ஒருவரை கடத்திச் சென்று வலுக்கட்டாயமாக கற்பழித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதனையடுத்து மாணவி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் கொடுத்தனர்.  பொற்றோரின் புகாரை அடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளி ஒருவரை கைது செய்தனர். கைது செய்யப்பட அவனிடம் போலீசார் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுபோன்ற சம்பவம் நேற்று முன்தினம், ஹரியானாவில்  உள்ள பதேஹாபாத்தின் பூதன் கிராமத்தில் 20 வயது நிறைந்த இளம்பெண் ஒருரை, அவரது வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில் அவரின் தனிமை நிலை அறிந்த அதே பகுதியை சேர்ந்த ஆறு பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்று வலுக்கட்டாயமாக அந்த இளம்பெண்னை கற்பழித்துள்ளனர் என்பது குறிபிடத்தக்கது.

Trending News