KeralaFlood: வெள்ளக்காடாய் மாறிய கொச்சி விமான நிலையம்!

கேராளவில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக, கொச்சி சர்வதேச விமான நிலையம் முழுவதும் மழை வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது!

Last Updated : Aug 16, 2018, 05:36 PM IST
KeralaFlood: வெள்ளக்காடாய் மாறிய கொச்சி விமான நிலையம்! title=

கேராளவில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக, கொச்சி சர்வதேச விமான நிலையம் முழுவதும் மழை வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது!

கேரளாவில் கடந்த ஆகஸ்ட் 8 முதல் தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால் கேரளா முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு கேரளா பகுதிகளில்  வெள்ளப்பெருக்கம் ஏற்பட்டு உள்ளது. கேரள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இதுவரை 72-க்கும் மேற்ப்பட்டோர் பேர் பலியாகியுள்ளனர். 

கனமழை காரணமாக கேரளாவில் உள்ள அணைகள் அனைத்தும் நிரப்பி வருகின்றனர். அதில் குறிப்பாக 20-க்கு மேற்ப்பட்ட அணைகள் தங்கள் கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் தண்ணீர் அதிக அளவில் திறந்து விடப்படுகிறது.

கேரளத்தின் 7 மாவட்டங்களில் வெள்ள சிவப்பு எச்சரிக்கை அறிவிக்கப்ட்டு உள்ளது. பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோட் மற்றும் இடுக்கி மாவட்டங்களாகும். இதில் இடுக்கி மடட்டத்தில் வரும் ஆகஸ்ட் 17-ம் நாள் வரை ஆரஞ்சு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டு உள்ளது. 

இந்நிலையில் கனமழை காரணமாக கொச்சி விமான நிலையம் முழுவதும் மழை வெள்ளதால் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக கொச்சி விமான நிலைய சேவைகள் வரும் சனிக்கிழமை நண்பகல் 2 மணி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது..

Trending News