Petrol இல்லாமல் இனி கார்கள் ஓடும்: புதிய திட்டம் விரைவில் அறிமுகம்

உணவு தானியத்தைப் பயன்படுத்தி எத்தனால் தயாரிக்கும் முறையைப் பற்றியும் குறிப்பிட்டுக் காட்டிய நிதின் கட்கரி அவர்கள், எத்தனால் தயாரிப்பதில் கரும்பின் பயன்பாடு அதிகமாக இருக்கும் என்றும் கூறினார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 10, 2020, 02:32 PM IST
  • கட்கரி ஆட்டோமொபைல் துறைக்கு அனைத்து ஆதரவையும் அளிப்பதாக உறுதியளித்தார்.
  • நுகர்வோர் தங்கள் கார்களை இயக்க பெட்ரோல் அல்லது எத்தனாலை தேர்வு செய்யலாம்
  • கார் தயாரிப்பாளர்கள் BS-IV அளவுகோல்களில் இருந்து BS-VI க்கு மாற வேண்டும்.
Petrol இல்லாமல் இனி கார்கள் ஓடும்: புதிய திட்டம் விரைவில் அறிமுகம் title=

புதுடெல்லி: பயணிகள் தங்களுக்கு விருப்பமான எரிபொருள் விருப்பத்தை தேர்வு செய்ய அனுமதிக்கும் ஃப்ளெக்ஸி எஞ்சின் விருப்பத் திட்டத்தில் (Flexi Engine Option Plan) போக்குவரத்து அமைச்சகம் செயல்பட்டு வருவதாக மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

வரும் நாட்களில் நுகர்வோர் தங்கள் கார்களை இயக்க பெட்ரோல் அல்லது எத்தனாலை தேர்வு செய்யலாம் என்று போக்குவரத்து அமைச்சர் கூறினார்.

உணவு தானியத்தைப் பயன்படுத்தி எத்தனால் தயாரிக்கும் முறையைப் பற்றியும் குறிப்பிட்டுக் காட்டிய நிதின் கட்கரி (Nitin Gadkari) அவர்கள், எத்தனால் தயாரிப்பதில் கரும்பின் பயன்பாடு அதிகமாக இருக்கும் என்றும் கூறினார்.

இந்த ஆண்டு செப்டம்பரில், கட்கரி ஆட்டோமொபைல் துறைக்கு (Automobile Industry) அனைத்து ஆதரவையும் அளிப்பதாக உறுதியளித்தார். அரசாங்கத்தின் 'ஆத்மனிர்பர் பாரத்' இயக்கத்துடன் இணக்கமாக மாற்று எரிபொருளை ஊக்குவிப்பதற்காக இந்தியாவில் பெரிய அளவில் நெகிழ்-எரிபொருள் இயந்திரங்களை அறிமுகப்படுத்த வாகன உற்பத்தியாளர்களை அவர் ஊக்குவித்தார்.

மாற்று எரிபொருளை ஊக்குவிப்பதற்காக, சில நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் வாகன உற்பத்தியாளர்களுக்கு சொந்த எரிபொருள் விசையியக்கக் குழாய்களை அமைக்க அனுமதி அளிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அவர்கள் கிரீன் ஃப்யூயலையும், அதாவது இயற்கை எரிபொருளையும் விற்க வேண்டும் என்பதுதான் நிபந்தனை.

கட்கரி கூறுகையில், கார் தயாரிப்பாளர்கள் பிரேசில், அமெரிக்கா (America) மற்றும் கனடாவுக்கு இணையாக இந்தியாவிலும் நெகிழ்வு இயந்திரங்களை எளிதில் அறிமுகப்படுத்த முடியும் என்று கூறினார். அவர்கள் அதற்கு BS-IV அளவுகோல்களில் இருந்து BS-VI க்கு மாற வேண்டும் என அவர் தெரிவித்தார்.

MSME போர்ட்ஃபோலியோவை வைத்திருக்கும் கட்கரி, இந்திய ஆட்டோமொபைல் தொழிற்துறையை உலகின் முதன்மையான உற்பத்தி மையமாக மாற்றுவதும், மாற்று எரிபொருளை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுக்கு 7 லட்சம் கோடி ரூபாய்க்கு, மிகப்பெரிய வருடாந்திர கச்சா எண்ணெய் இறக்குமதி கட்டணத்தைக் குறைப்பதும் தன் துறையின் நோக்கமாக உள்ளது என்றார்.

இந்த ஆண்டு ஜனவரியில், ரூ .50,000 கோடி எத்தனால் பொருளாதாரத்தை உருவாக்க விரும்புவதாக கட்கரி வலியுறுத்தினார். இந்த இயற்கை எரிபொருள் சூழலியல் மற்றும் பொருளாதாரம் ஆகிய இரண்டிற்கும் பயனளிக்கும் என்று கட்கரி தெரிவித்தார்.

எத்தனால் பயன்பாட்டைப் பற்றிய நம்பிக்கையை உண்டுபண்ணுவதில் பல ஆண்டுகள் கடந்துவிட்டன என்று கூறிய கட்கரி, கடந்த ஐந்து ஆண்டுகளில், எத்தனால் தொடர்பான கொள்கை உண்மையான அர்த்தத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

ALSO READ: விரைவில் வருகிறது Ola-வின் Electric Scooter: இனி குறுகிய தெருக்களும் Ola வசம்

இந்நாட்களில் ஏராளமான எண்ணெய் நிறுவனங்களும் மற்ற நிறுவனங்கலும் பசுமை எரிபொருள் துறையில் சரியான திசையில் செல்கிறார்கள். அதிகரித்த எத்தனால் பயன்பாடு சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார ரீதியாக வெகுவாக உதவும் என்று கட்கரி மேலும் கூறினார். இது கச்சா எண்ணெய் (Crude Oil) இறக்குமதியைக் குறைக்க வழிவகுக்கும். மேலும் சூழலியல் மற்றும் பொருளாதாரத்திற்கும் பயனளிக்கும் என்று கட்கரி நம்பிக்கை அளித்தார்.

இந்தியாவைப் பொறுத்த வரை மாற்று எரிபொருள் துறையில் நாம் பல முன்னேற்றங்களை செய்து வருகிறோம். நீட்டித்த ஆற்றல் கொண்ட நிலையான இயற்கை வளங்களைப் பயன்படுத்தி எரிபொருளுக்கான பல அடித்தடங்களை அமைத்து வருகிறோம். பெட்ரோலுக்காக நாம் மற்ற நாடுகளை எதிர்பார்க்கும் அளவில் சற்று குறைவு ஏற்பட்டாலும், அது நம் பொருளாதாரத்தை வெகுவாக உயர்த்தும் என்பதில் சந்தேகம் இல்லை. 

ALSO READ: Indian Oil Carnival offer: SUV, கார், பைக் மற்றும் பல பரிசுகளை வெல்ல ஒரு அரிய வாய்ப்பு

Trending News