மீன்பிடி படகு மீது சரக்கு கப்பல் மோதி 2 மீனவர்கள் பலி

Last Updated : Jun 11, 2017, 01:12 PM IST
மீன்பிடி படகு மீது சரக்கு கப்பல் மோதி 2 மீனவர்கள் பலி title=

கேரளாவில் மீன்பிடி படகு மீது சரக்கு கப்பல் மோதி 2 இந்திய மீனவர்கள் பலி, 11 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த விபத்து கொச்சி துறைமுகத்தில் நிகழ்ந்துள்ளது. இங்கு வந்த பனாமா நாட்டைச் சேர்ந்த சரக்கு கப்பல் ஒன்று, துறைமுகத்தில் இருந்து வெளியேறும்போது, எதிர்பாராவிதமாக, அங்கே மீன்பிடித்துக் கொண்டிருந்த படகு மீது மோதியது.

இதில், இந்திய மீனவர்கள் 2 பேர் உயிரிழந்தனர். 11 பேர் படுகாயமடைந்தனர். சம்பவத்திற்குக் காரணமான, அந்த சரக்கு கப்பல் உடனடியாக மாயமாகிவிட்டது. 

அதனை இந்திய கடலோர படையினர் உதவியுடன் கேரள போலீசார் தேடி, பறிமுதல் செய்துள்ளனர். சரக்குக் கப்பலின் கேப்டன், ஊழியர்கள் அனைவரையும் போலீசார் தங்களது பிடிக்குள் கொண்டுவந்துள்ளனர்.

இன்று அதிகாலை இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இது கேரள கடல்பரப்பில் நடைபெறும் 2வது மோதல் சம்பவமாகும். ஏற்கனவே, 2012ம் ஆண்டு இத்தாலி கடற்படையினர், கேரள மீனவர்கள் 2 பேரை சுட்டுக் கொன்றதும் குறிப்பிடத்தக்கது.

Trending News