ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக பாஜக பிரமுகர் சுட்டுக்கொலை!

பிஹார் மாநிலம் முஹாபூர் மாவட்டத்தில் பாஜக பிரமுகர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்!

Last Updated : Jan 10, 2019, 10:46 AM IST
ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக பாஜக பிரமுகர் சுட்டுக்கொலை! title=

பிஹார் மாநிலம் முஹாபூர் மாவட்டத்தில் பாஜக பிரமுகர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்!

சமீப காலமாக பாஜக மூத்த தலைவர்கள், பிரமுகர்கள் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தற்போது பிஹாரின் முஹாபூர் மாவட்டத்தை சேர்ந்து உள்ளூர் பாஜக பிரமுகர் மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.

நேற்று மாலை நிகழ்ந்த இச்சம்பவத்தில் கொல்லப்பட்ட பாஜக பிரமுகர் பெயர் பைய்ஜு பிரசாத் குப்தா என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் தனது கிராமத்தில் சிறிய மருந்தகம் ஒன்று நடத்தி வருவதாக தெரிகிறது. 

சம்பவத்தின் போது, மருந்தகத்திற்கு வந்த நபர் ஒருவர் குறிப்பிட்ட மருந்து குறித்து விசாரித்துள்ளார். பின்னர் திடீரென தனது கையில் இருந்த துப்பாக்கியை கொண்டு பிரசாத் குப்தாவை சுட்டு தப்பிச்சென்றுள்ளார். உள்ளூர்வாசிகள் கொடுத்த புகாரின் பேரில் சம்பவயிடத்திற்கு காவல்துறையினர் விரைந்துள்ளனர். 

இதுகுறித்து கிழக்கு முஹாபூர் நகர் காவல்துறை அதிகாரி கௌரவ் பாண்டே தெரிவிக்கையில்., சம்பவயிடத்தில் இருந்து தோட்டா சிதல்கள் கைப்பற்றியுள்ளோம். விசாரணையில் பைய்ஜூ பிரசாத் வீட்டில் செய்யப்படும் மருந்துகளை நாட்டு மருந்து என்ற பெயரில் மருந்தகத்தில் விற்று வந்துள்ளார். மருந்தகத்தில் CCTV பொருத்தப்படாத நிலையில் கிராமவாசிகளின் தகவல்களை கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றோம் என தெரிவித்தார்.

முன்னதாக கடந்த செவ்வாய் அன்று குஜராத் மாநில முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெயந்திலால் பானுஷலி, தான் பயணித்த ரயிலில் வைத்து மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப் பட்டது குறிப்பிடத்தக்கது.

Trending News