ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஜாக்பாட், இனி தரமான அரிசி கிடைக்கும்

அந்த்யோதயா அன்ன யோஜனா திட்ட பயனாளிகளுக்கு ரேஷன் கார்டுக்கு 21 கிலோ அரிசி மற்றும் 14 கிலோ கோதுமை இலவசமாக வழங்கப்படுகிறது. இப்போது ரேஷன் கார்டுதாரர்களுக்கு கோதுமை தவிர, செறிவூட்டப்பட்ட அரிசியும் நிர்ணயிக்கப்பட்ட அளவிலேயே வழங்கப்படும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Mar 13, 2023, 01:00 PM IST
  • ரேஷன் கடை அரிசியில் வருகிறது மாற்றம்.
  • விரைவில் அறிமுகமாகிறது செறிவூட்டப்பட்ட அரிசி.
  • சத்துணவு திட்டத்திலும் இந்த அரிசி பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஜாக்பாட், இனி தரமான அரிசி கிடைக்கும் title=

பெண்கள் மற்றும் குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாட்டை தடுக்கும் வகையில், ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஒவ்வொரு மாதமும் இலவச செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க மத்திய அரசு புதிய முடிவை மேற்கொண்டுள்ளது. இதற்காக மாவட்டத்துக்கு விரைவில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்பட உள்ளது. இந்த அரிசியை உட்கொள்வதன் மூலம், இரும்புச்சத்து, ஃபோலிக் அமிலம் மற்றும் வைட்டமின் பி12 ஆகியவற்றைப் பெற முடியும். செறிவூட்டப்பட்ட அரிசி சாதாரண அரிசியின் சுவையிலேயே இருக்கும். மேலும் சமைக்கும் முறை ஒன்றுதான், ஆனால் செறிவூட்டப்பட்ட அரிசியில் அதிக சத்துக்கள் உள்ளன. மேலும் முதல் கட்டமாக அங்கன்வாடி மையங்களிலும் , சத்துணவு திட்டத்திலும் இந்த அரிசி பயன்படுத்தப்பட்டு வருகிறது.

2023ஆம் ஆண்டு உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ரேஷன் கார்டுதாரர்களுக்கு மாதந்தோறும் இலவச உணவு தானியங்கள் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது. இதன் கீழ், தகுதியுள்ள வீட்டு ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஒரு யூனிட் ஒன்றுக்கு 3 கிலோ அரிசி மற்றும் 2 கிலோ கோதுமை இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க | 7th Pay Commission: அடி தூள்... மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 ஜாக்பாட் அறிவிப்புகள்!!

அந்த்யோதயா அன்ன யோஜனா திட்ட பயனாளிகளுக்கு ரேஷன் கார்டுக்கு 21 கிலோ அரிசி மற்றும் 14 கிலோ கோதுமை இலவசமாக வழங்கப்படுகிறது. இப்போது ரேஷன் கார்டுதாரர்களுக்கு கோதுமை தவிர, செறிவூட்டப்பட்ட அரிசியும் நிர்ணயிக்கப்பட்ட அளவிலேயே வழங்கப்படும்.

மாவட்டத்தில் செறிவூட்டப்பட்ட அரிசி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த அரிசி ரேஷன் கடைகளுக்கு வரத் தொடங்கும். இது குறித்து மாவட்ட வழங்கல் அலுவலர் விகாஸ்குமார் கூறுகையில், இந்த அரிசியில் சாதாரண அரிசியை விட சத்துக்கள் அதிகம் என்று கூறியுள்ளார்.

ஃபேக்ட் ஃபைல்
* மாவட்டத்தில் தகுதியான குடும்பப் பிரிவினரின் மொத்த ரேஷன் கார்டுகள் 3 லட்சத்து 38 ஆயிரத்து 352
* மாவட்டத்தில் அந்த்யோதயா அன்ன திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட 36 ஆயிரத்து 542 ரேஷன் கார்டுகள்
* மாவட்டத்தில் உள்ள நியாய விலைக் கடைகளின் எண்ணிக்கை 885

மேலும் படிக்க | Same Sex Marriage: மத்திய அரசையும் மீறி சட்டப்பூர்வமாகுமா தன்பாலின திருமணம்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News