ஈர்ப்பு + நெருக்கம் = காதல் என மாணவர்களுக்கு வகுப்பெடுத்த பேராசிரியர் கைது!

ஈர்ப்பு + நெருக்கம் = காதல் என வகுப்பெடுத்த கல்லூரி பேராசிரியர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்!!

Last Updated : Mar 17, 2019, 12:20 PM IST
ஈர்ப்பு + நெருக்கம் = காதல் என மாணவர்களுக்கு வகுப்பெடுத்த பேராசிரியர் கைது! title=

ஈர்ப்பு + நெருக்கம் = காதல் என வகுப்பெடுத்த கல்லூரி பேராசிரியர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்!!

ஹரியானா: மகளிர் கல்லூரி ஒன்றில் வகுப்பறையில் ஒரு கணவர் மற்றும் மனைவியின் இடையிலான உறவு பற்றி நேர்மையற்ற விதத்தில் மாணவர்களுக்கு கற்பிக்கும் வீடியோ இணையத்தில் வைரலான பின்னர் அந்த கல்லூரி கணித உதவியாளர் பேராசிரியர் இடைநீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஹரியானா மாநிலம் கர்னலில் அரசு மகளிர் கல்லூரியில் பாடம் நடத்திய கணிதப் பேராசிரியர், நட்பு, ஈர்ப்பு, விருப்பம், காதல் ஆகியவற்றுக்கான வேறுபாட்டை மாணவிகளுக்கு விளக்கி கூறினார். ஈர்ப்போடு நெருக்கத்தைக் கூட்டினால் காதல் என்றும், நெருக்கத்தில் இருந்து ஈர்ப்பைக் கழித்தால் நட்பு என்றும் கூறினார். இதனை மாணவி ஒருவர் தனது கைபேசியில் வீடியோ பதிவு செய்து இணையதளத்தில் பகிர்ந்துள்ளார்.  

இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து சக மாணவிகள், புகார் தெரிவிக்காத நிலையில், வீடியோ வேகமாக பரவியதை அடுத்து கணிதப் பேராசிரியர் சரண் சிங்கை கைது செய்ய சமூக ஆர்வலர்கள் புகாரளித்தனர். இதையடுத்து அந்த கணித ஆசிரியர் பணிநீக்கம் செய்யப்பட்டார். இவர் அரசு பி.ஜி. கல்லூரியில், பிரிவு 14 இல் பதவி உயர்வு பெற்றார், ஆனால் இந்த கல்லூரியில் பணிபுரிந்தார்.

 

Trending News