மன உளைச்சலால் MLA பதவியை ராஜினாமா செய்த அஜித் பவார்..

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான அஜித் பவார் மன உளைச்சலால் MLA பதவியை ராஜிநாமா செய்ததாக சரத் பவார் தெரிவித்துள்ளார்!!

Last Updated : Sep 28, 2019, 12:53 PM IST
மன உளைச்சலால் MLA பதவியை ராஜினாமா செய்த அஜித் பவார்.. title=

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான அஜித் பவார் மன உளைச்சலால் MLA பதவியை ராஜிநாமா செய்ததாக சரத் பவார் தெரிவித்துள்ளார்!!

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (NCP) தலைவர் சரத் பவாரின் மருமகனும் கட்சியின் மூத்த தலைவருமான அஜித் பவார் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததாக தெரிவித்தார். மகாராஷ்டிரா மாநில கூட்டுறவு வங்கி பணமோசடி வழக்கில் அமலாக்க இயக்குநரகம் (ED) அவரை பெயரிட்டதை அடுத்து அவர் "கலக்கம் அடைந்தார்".

"காரணம் தெரிந்து கொள்ள நான் அவரது மகனையும் மற்றவர்களையும் தொடர்பு கொண்டேன். அவரது (அஜித் பவார்) பெயரும் இருக்கும் ஒரு வழக்கில் மாமாவின் (ஷரத் பவார்) பெயர் கொண்டுவரப்பட்டிருப்பது மிகவும் கவலையாக இருப்பதாக அவர் தனது குடும்பத்தினருக்கு தெரிவித்தார். இதனால் அவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார், ”என்று பவர் இங்குள்ள ஊடகவியலாளர்களிடம் கூறினார்.

இதுதொடர்பாக மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தலைவர் ஹரிபாவ் பகடே, செய்தியாளர்களிடம் கூறுகையில்; ராஜிநாமா கடிதத்தை அஜித் பவார் அளித்தார். என்ன காரணத்துக்காக அவர் ராஜிநாமா செய்தார் என்று அக்கடிதத்தில் குறிப்பிடவில்லை.

எனது தனிச் செயலரிடம் ராஜிநாமா கடிதத்தை அளித்தார். அவர் என்னிடம் இதுகுறித்து தகவல் தெரிவித்தபோது திகைத்தேன். அஜித் பவாரிடம் ஏன் ராஜிநாமா செய்கிறீர்கள் என்று கேட்டேன். ஆனால், காரணத்தை பின்னர் தாம் கூறுவதாகவும், ராஜிநாமா கடிதத்தை ஏற்குமாறும் அவர் தெரிவித்தார் என்றார் ஹரிபாவ் பகடே.

பாராமதி தொகுதி எம்எல்ஏவாக அஜித் பவார் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வந்தார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், "அவர் ஏன் ராஜிநாமா செய்தார் என்று தெரியவில்லை. அவரை தொடர்புகொள்ள முடியவில்லை" என்றார்.  

 

Trending News