தாக்குதல் புகாரில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ சோம்நாத் பார்தி கைது

Last Updated : Sep 22, 2016, 01:23 PM IST
தாக்குதல் புகாரில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ சோம்நாத் பார்தி கைது title=

டெல்லியில் ஆம் ஆத்மி எம்,எல்.ஏ சோம்நாத் பார்தி கைது செய்யப்பட்டுள்ளார். 

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை பாதுகாவலர்களை தாக்கிய வழக்கில் சோம்நாத் பார்தி மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது ஹவுஸ்காஸ் போலீஸ் நிலையத்தில் கடந்த செப்டம்பர் 9-ம் தேதி புகார் பதிவு செய்யப்பட்டது. 

சோம்நாத் பார்தி மற்றும் அவரது ஆதரவாளர்கள் உரிய அனுமதியில்லாமல் உள்ளே நுழைந்ததாகவும், மருத்துவமனை சொத்துக்களை சேதப்படுத்தியோடு, பாதுகாவலர்களை தாக்கியதாகவும் கூறப்பட்டிருந்த புகாரின் பேரில் இன்று சோம்நாத் பார்தி கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இவர் தனது மனைவியை துன்புறுத்தியதாக கடந்த வருடம் கைது செய்யப்பட்டார். பின்னர் பெயிலில் விடுதலையானார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., அமானுத்துலா கான் கைதாகி இரண்டு நாட்களாகியுள்ள நிலையில், தாக்குதல் தொடர்பான வழக்கில் சோம்நாத் பார்தி இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

Trending News